அவ்வளவு சத்தமா கேக்குது? : அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களுக்கு 'செக்' வைத்த போலீஸ் - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவ்வளவு சத்தமா கேக்குது? : அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களுக்கு ‘செக்’ வைத்த போலீஸ் – சிறப்பு தொகுப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 22, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் நூதன முறையில் வழங்கியுள்ள தண்டனை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

வாகனங்களில் பொருத்தப்படும் ஹாரன்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அளவில் ஒலி எழுப்பும் திறன் கொண்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், லாரி, பேருந்து போன்ற ஒவ்வொரு வாகனத்திலும் வெவ்வேறு மாதிரி ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் உள்ளன.

85 டெசிபலுக்கு மேலான ஒலி மனிதனின் செவித்திறனை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற வாகனங்களில் பொருத்தப்படும் ஹாரன்களின் ஒலி அதற்கு ஏற்றார்போல் இருக்க வேண்டும் என்பது அவசியம்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் சாதாரண இருசக்கர வாகனங்களில் காருக்கு பொருத்தப்படும் ஹாரன்கள் பொருத்தி ஒலி எழுப்புவது, தனியார் பேருந்துகளில் ஒரே நேரத்தில் பல விதமான ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது போன்ற செயல்கள் பல அசம்பாவிதங்கள் நேர வழிவகுக்கின்றன.

இதனால் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்தது. அதன் எதிரொலியாக தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் ஹாரன்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல சட்ட நடவடிக்கைகள் மாநில காவல்துறையால் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும் ஒரு சிலர் தனியார் பேருந்துகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்நிலையில், அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகளுக்கு கர்நாடக மாநில போக்குவரத்து போலீசார் நூதன முறையில் வழங்கி வரும் தண்டனை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி வரும் வாகனங்களை மடக்கி பிடிக்கும் போக்குவரத்து போலீசார், அதன் ஓட்டுநர்களை அந்த ஹாரன்களின் ஒலியை நேரடியாக கேட்கவைத்து தண்டனை வழங்கி வருகின்றனர். போலீசாரின் இந்த அதிரடி செயல்பாடு வாகனங்களில் உள்ள ஏர் ஹாரன்களை கழற்றி வீசும் அளவுக்கு வாகன ஓட்டிகளை கதிகலங்க செய்துள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள இளைஞர் ஒருவர், மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் சரியான தண்டனை வழங்கி பாடம் புகட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போக்குவரத்து போலீசாரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags: Traffic Policeinnovative punishmentloud hornstwo-wheelersautoscarslorrieskarnataka
ShareTweetSendShare
Previous Post

பிரயாக்ராஜில் அமைச்சரவை கூட்டம் – திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய உ.பி. முதல்வர்!

Next Post

தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி சங்கர் – வெளியானது பைரவம் திரைப்பட டீசர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies