அவ்வளவு சத்தமா கேக்குது? : அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களுக்கு 'செக்' வைத்த போலீஸ் - சிறப்பு தொகுப்பு!
Sep 10, 2025, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவ்வளவு சத்தமா கேக்குது? : அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களுக்கு ‘செக்’ வைத்த போலீஸ் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 22, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் நூதன முறையில் வழங்கியுள்ள தண்டனை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

வாகனங்களில் பொருத்தப்படும் ஹாரன்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அளவில் ஒலி எழுப்பும் திறன் கொண்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், லாரி, பேருந்து போன்ற ஒவ்வொரு வாகனத்திலும் வெவ்வேறு மாதிரி ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் உள்ளன.

85 டெசிபலுக்கு மேலான ஒலி மனிதனின் செவித்திறனை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற வாகனங்களில் பொருத்தப்படும் ஹாரன்களின் ஒலி அதற்கு ஏற்றார்போல் இருக்க வேண்டும் என்பது அவசியம்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் சாதாரண இருசக்கர வாகனங்களில் காருக்கு பொருத்தப்படும் ஹாரன்கள் பொருத்தி ஒலி எழுப்புவது, தனியார் பேருந்துகளில் ஒரே நேரத்தில் பல விதமான ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது போன்ற செயல்கள் பல அசம்பாவிதங்கள் நேர வழிவகுக்கின்றன.

இதனால் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்தது. அதன் எதிரொலியாக தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் ஹாரன்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல சட்ட நடவடிக்கைகள் மாநில காவல்துறையால் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும் ஒரு சிலர் தனியார் பேருந்துகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்நிலையில், அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகளுக்கு கர்நாடக மாநில போக்குவரத்து போலீசார் நூதன முறையில் வழங்கி வரும் தண்டனை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி வரும் வாகனங்களை மடக்கி பிடிக்கும் போக்குவரத்து போலீசார், அதன் ஓட்டுநர்களை அந்த ஹாரன்களின் ஒலியை நேரடியாக கேட்கவைத்து தண்டனை வழங்கி வருகின்றனர். போலீசாரின் இந்த அதிரடி செயல்பாடு வாகனங்களில் உள்ள ஏர் ஹாரன்களை கழற்றி வீசும் அளவுக்கு வாகன ஓட்டிகளை கதிகலங்க செய்துள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள இளைஞர் ஒருவர், மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் சரியான தண்டனை வழங்கி பாடம் புகட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போக்குவரத்து போலீசாரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags: two-wheelersautoscarslorrieskarnatakaTraffic Policeinnovative punishmentloud horns
ShareTweetSendShare
Previous Post

பிரயாக்ராஜில் அமைச்சரவை கூட்டம் – திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய உ.பி. முதல்வர்!

Next Post

தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி சங்கர் – வெளியானது பைரவம் திரைப்பட டீசர்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies