எதிர்பார்ப்பை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட் 2025 : ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?
Jul 26, 2025, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட் 2025 : ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

Web Desk by Web Desk
Jan 24, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய மத்திய பட்ஜெட்டில் ஜவுளித்துறை மீது தனி கவனம் செலுத்தி, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என திருப்பூர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

சர்வதேச சந்தையில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 55 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் ஜவுளி உற்பத்தியில் முதன்மை இடத்தில் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி மூலம் ஆண்டுக்கு ஏறக்குறைய 70 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டித்தரும் தொழில் நகரமாக விளங்குகிறது திருப்பூர்.

திருப்பூரில் 1930-ம் ஆண்டு ஒரே ஒரு பின்னலாடை இயந்திரத்துடன் தொடங்கிய ஜவுளி உற்பத்தி, 1980-ம் ஆண்டு 50 கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடை துணிகளை ஏற்றுமதி செய்தது. இந்த வளர்ச்சி கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகத்தையும், 35 ஆயிரம் கோடி உள்நாட்டு உற்பத்தி வர்த்தகத்தையும் எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டுகளில் பருத்தி தட்டுப்பாடு, நிலையில்லாத நூல் விலை உயர்வு, கன்டெய்னர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு கட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டது ஜவுளித்துறை. தொடர்ந்து உற்பத்தியாளர்கள் செயற்கை இழைகளுக்கு மாறத் தொடங்கிய நிலையில், உற்பத்தி செலவு அதிகரித்ததால் உள்நாட்டு வர்த்தகம் பெருமளவு சரிந்தது.

இருந்தபோதிலும் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் மீண்டும் ஏற்றம் கண்டுள்ள ஜவுளித்துறை வர்த்தகம், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 12 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு கடந்த ஆண்டைப்போல அல்லாமல், ஜவுளித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில்துறையினர் இடையே அதிகரித்துள்ளது.

குறிப்பாக புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய இயந்திரங்கள் வாங்க மானியம், பசுமை தொழிற்சாலைகளை ஊக்குவிக்க சிறப்பு ஊக்கத் தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஜவுளி உற்பத்தியில் 6-ம் இடத்தில் உள்ள இந்தியா முன்னிலை வகிக்கும் பிற நாடுகளுடன் போட்டிபோட முடியாததற்கு, அரசின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் எனக்கூறும் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளித்துறைக்கு என தனி வாரியம் அமைத்திடவும், வங்கிகள் எளிய முறையில் கடனுதவி வழங்கிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

வங்க தேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில், பல புதிய ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளதால் ஜவுளித்துறை மீது அரசு தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா மத்திய பட்ஜெட்? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: union budgetAnticipated Union Budget 2025New announcementstextile industryunion budget highlightsbudgetunion budget 2025union budget 2025 dateunion budget 2025 income tax
ShareTweetSendShare
Previous Post

மோடி 3.O பட்ஜெட் : வேலையில்லா திண்டாட்ட பிரச்னைக்கு முன்னுரிமை!

Next Post

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : பனாமா கால்வாயை டிரம்ப் விரும்புவது ஏன்?

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies