எம்.பி நவாஸ் கனி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Sep 10, 2025, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எம்.பி நவாஸ் கனி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 23, 2025, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்க நடக்கும் சதி திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாஜக   தேசிய மகளிரணி தலைவரும்  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால் மட்டும் போதாது, முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக மத அடிப்படைவாதிகளிடம் மென்மையான போக்கு கூடாது.

தமிழர்களுக்கு தமிழ்’ எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் ‘முருகப் பெருமான் அதனால், அவரை ‘தமிழ்க் கடவுள்’ என்கிறோம்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும், ஒருவரது பெயராவது, முருகன் சார்ந்த பெயர்களாக இருக்கும் அந்த அளவுக்கு தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டற கலத்தவர் முருகப் பெருமான். தமிழ்நாட்டில் முருகன் கோவில்கள் இல்லாத ஊர்களே இல்லை. ஆனாலும், முருகனின் அறுபடை வீடு மிகமிக முக்கியமானது புனிதமானது அதில் மதுரை அருகில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள முருகன் கோயில் முதலாவது படைவீடு இத்திருக்கோயில் பற்றி நக்கீரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகியோர் பாடியுள்ளனர்.

வரலாறு சிறப்புமிக்க இந்த முருகன் கோயில் அமைந்துள்ள மலையில், தர்கா ஒன்று இடைகாலத்தில் வந்துள்ளது. இதை காரணம்காட்டி இந்த மலையே. தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் பிரச்னை செய்து வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தின் போது, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இப்போது தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை முருகனின் மலை என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இந்தச் சூழலில் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட்டு விருந்து நடத்தப் போவதாக, இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் அறிவித்து தமிழகத்தில் மத மோதலை உண்டாக்க திட்டமிட்டனர்.

காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்திய நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி தனது ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்.

இந்துக்களின் மனதை, முருக பக்தர்களின் மனதை புண்படுத்த வேண்டும், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் மத மோதலை உண்டாக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கமே இதன் பின்னணயில் உள்ளது.

முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்க நடக்கும் சதி திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

இதுபோன்று மத மோதலை உண்டாக்கும் வகையில் செயல்படும் அடிப்படைவாத சக்திகளை, திமுக அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில் விளைவுகள் மோசமாகிவிடும் சிறுபான்மை மததத்தினர் வாக்கு வங்கி அரசியலுக்காக மத அடிப்படைவாதிகளிடம் திமுக மென்மையான போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

அதுதான் இது போன்ற பிரச்னைகளுக்கு காரணம். இந்து கோயில்களை மட்டும் தன் பிடியில் வைத்திருக்கும் திமுக அரசு, இந்துக்களை ஏமாற்றுவதற்காக ‘முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினால் மட்டும் போதாது, முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்து கோயில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திமுக அரசு, கோயிலுக்கு ஒரு பிரச்னை என்றால் வேடிக்கை பார்ப்பதும், கோயிலுக்கு எதிரான சக்திகளுக்கு துணை நிற்பதும் காலம் காலமாக நடந்து வருகிறது.

இனியும் அதுபோல நடக்கக்கூடாது. திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சாப்பிட்ட முஸ்லிம் லீக் எம்.பி நவாஸ் கனி மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள், மற்றொரு மதத்தின் நம்பிக்கைகளை புனிதத்தை மதிக்க வேண்டும்.

அப்படி மதிக்க மனம் இல்லை என்றாலும், இழிவுப்படுத்த கூடாது. இது போன்ற செயல்களை அனுமதித்தால் சமூகத்தில் அமைதி இருக்காது. இதை புரிந்து கொண்டு நவாஸ் கனி மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மாறாக வழக்கம் போல, இந்துக்களை ஏமாற்றி விடலாம் என நினைத்தால், முருக பக்தர்கள் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags: Vanathi Srinivasan insiststn bjpbjp mlatamil janamtn politicsGovt should take action against MP Nawaz Gani
ShareTweetSendShare
Previous Post

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் மெத்தனால் பறிமுதல்!

Next Post

உணவு டெலிவரி செய்பவர்களுக்கு விதிமுறைகள் : உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies