இந்தியாவின் மற்றொரு அசத்தல் : வருகிறது உலகின் அதிசக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரயில் !
Nov 16, 2025, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் மற்றொரு அசத்தல் : வருகிறது உலகின் அதிசக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரயில் !

Web Desk by Web Desk
Jan 24, 2025, 09:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் எஞ்சினை உள்நாட்டிலேயே இந்தியா உருவாக்கி உள்ளது. இதன் மூலம், பசுமை ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ஐந்தாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணியில் இந்தியாவும் இறங்கியது. சென்னையில் ஐசிஎப் தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது.

2023-24 நிதியாண்டில், 35 ஹைட்ரஜன் ரயில்களை மேம்படுத்த 2800 கோடி ரூபாய் ரயில்வே அமைச்சகம் ஒதுக்கியது. மேலும், பாரம்பரிய வழித்தடங்களுக்கான ஹைட்ரஜன் உள்கட்டமைப்புக்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஹைட்ரஜன் ரயிலும் 80 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது. மேலும் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க 70 கோடி ரூபாய் செலவிடப்படும்.

உலகளவில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில்களை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளன. அந்த ஹைட்ரஜன் ரயில் இன்ஜின் 500 முதல் 600 வரை குதிரைத்திறன் கொண்டவையாகும். ஆனால்,இந்திய ரயில்வேயின் ஹைட்ரஜன் ரயில் இன்ஜின் ஒப்பிடமுடியாத 1,200 குதிரைத்திறன் கொண்டதாகும்.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்திய ஹைட்ரஜன் ரயில் இன்ஜின், உலகின் வேறு எந்த நாடும் உருவாக்கிய இன்ஜினை விட அதிகபட்ச குதிரைத்திறனை உற்பத்தி செய்கிறது. எனவே இந்தியா தயாரித்த ஹைட்ரஜன் ரயிலே உலகின் அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரயிலாகும்.

ஹைட்ரஜன் ரயிலின் முதல் சோதனை ஓட்டம், ஹரியானாவில் ஜிந்த்-சோனிபட் பாதையில் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தவகை ஹைட்ரஜன் ரயில்கள் இயங்குவதற்குத் தேவையான மின்சாரத்தை ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் உருவாக்குவதால் தனித்து நிற்கின்றன.

ஹைட்ரஜனை ஆக்ஸிஜனுடன் இணைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.எனவே, தீங்கு விளைவிக்கும் உமிழ்வை நீக்குகின்றன.

பாரம்பரிய டீசல் அல்லது மின்சார இயந்திரங்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் ரயில்கள் விளங்குகின்றன. குறைந்த கார்பன் தடம் மற்றும் குறைக்கப்பட்ட ஒலி மாசுபாடு ஆகியவற்றால், ஹைட்ரஜன் ரயில்கள், ரயில் பயணிகளுக்கு பசுமையான மற்றும் அமைதியான பயண அனுபவத்தை வழங்கும் என்று கூறப் பட்டுள்ளது.

இந்த ஹைட்ரஜன் இன்ஜின் தொழில்நுட்பம், லாரிகள், இழுவை படகுகள் மற்றும் பிற தொழில்துறை பயன்பாடுகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் பசுமை ஆற்றலுக்கான செயல் திட்டத்தை இந்த ஹைட்ரஜன் ரயில் , வெளிக்காட்டுகிறது.

இந்திய ரயில்வே துறையின் இந்த சாதனை ஹைட்ரஜன் ரயில் உலகளாவிய பசுமை எரிசக்தி நிலப்பரப்பில் இந்தியாவின் நிலையை உயர்த்தி உள்ளது.

நாட்டின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தன்னிறைவைக் காட்டும் ஹைட்ரஜன் ரயில், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்கு பார்வையின் அடையாளமாக உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்கால போக்குவரத்துக்கான சாதனையாக இந்த ஹைட்ரஜன் ரயில் பாராட்டப் படுகிறது.

Tags: IndiaMake in indiaAnother wonder of IndiaWorld's most powerful hydrogen trainhydrogen train
ShareTweetSendShare
Previous Post

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : பனாமா கால்வாயை டிரம்ப் விரும்புவது ஏன்?

Next Post

மதுரை டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies