ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Oct 27, 2025, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக்கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த தொகுதியில் செல்வாக்கான கட்சிகள் கொட்டை அமைத்து வாக்காளர்களை தங்கவைப்பதை தடுக்கக்கோரி, மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தனது மனுவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின்போது ஆளும் கட்சி கூட்டணி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவும், பிற கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும், வார்டு வாரியாக கொட்டகைகள் அமைத்து அதில் வாக்காளர்கள் தங்க வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொட்டகைகளில் தங்கவைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு, வாக்குக்கு பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே, தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொட்டகை அமைக்கும் நடைமுறை தொடருமோ என்ற அச்சத்தால் அவற்றை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாகவும்,

அந்த மனுவில் தொகுதிக்கு வரும் வெளியாட்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும், தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் கே.பி.எம்.ராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனவரி 8-ம் தேதி அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் இதுவரை பதிலளிக்கவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, வாக்காளர்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியதுடன், தேர்தல்களில் யார்தான் சலுகைகள் வழங்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்தனர்.

மேலும், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Tags: Election commissionErode East constituency by electionஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்Madras High Court orders the Election CommissionMadras High Court orders
ShareTweetSendShare
Previous Post

மைனர் பெண் கருக்கலைப்பு : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

சென்னை விமான நிலையத்தில் ரூ. 23 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்!

Related News

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

மருது சகோதரர்களின் 224வது குருபூஜை : சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!

காஞ்சிபுரம் : உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ மகாலட்சுமி சுமங்கலி பூஜை!

ஸ்ரீபெரும்புதூரில் திடீரென பெயர்ந்து சேதமான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சி குழு அறிவிப்பு – சூடான்

ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பைப் பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு!

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

கந்தசஷ்டி விழாவை ஒட்டி தண்டு விரதம் மேற்கொண்ட பக்தர்கள்!

தெலங்கானா : சிறுமியை கடித்து குதறிய நாய்கள் – அதிர்ச்சி சிசிடிவி!

வெற்றிகரமாகச் சுற்றுவட்டப்பாதையை அடைந்த எச்.டி.வி., – எக்ஸ் 1 விண்கலம் – ஜப்பான்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies