ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 11, 2025, 09:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக்கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த தொகுதியில் செல்வாக்கான கட்சிகள் கொட்டை அமைத்து வாக்காளர்களை தங்கவைப்பதை தடுக்கக்கோரி, மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தனது மனுவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின்போது ஆளும் கட்சி கூட்டணி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவும், பிற கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும், வார்டு வாரியாக கொட்டகைகள் அமைத்து அதில் வாக்காளர்கள் தங்க வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொட்டகைகளில் தங்கவைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு, வாக்குக்கு பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே, தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொட்டகை அமைக்கும் நடைமுறை தொடருமோ என்ற அச்சத்தால் அவற்றை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாகவும்,

அந்த மனுவில் தொகுதிக்கு வரும் வெளியாட்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும், தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் கே.பி.எம்.ராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனவரி 8-ம் தேதி அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் இதுவரை பதிலளிக்கவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, வாக்காளர்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியதுடன், தேர்தல்களில் யார்தான் சலுகைகள் வழங்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்தனர்.

மேலும், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Tags: Election commissionErode East constituency by electionஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்Madras High Court orders the Election CommissionMadras High Court orders
ShareTweetSendShare
Previous Post

மைனர் பெண் கருக்கலைப்பு : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

சென்னை விமான நிலையத்தில் ரூ. 23 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies