ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Jan 14, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jan 29, 2025, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக்கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த தொகுதியில் செல்வாக்கான கட்சிகள் கொட்டை அமைத்து வாக்காளர்களை தங்கவைப்பதை தடுக்கக்கோரி, மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தனது மனுவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின்போது ஆளும் கட்சி கூட்டணி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவும், பிற கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும், வார்டு வாரியாக கொட்டகைகள் அமைத்து அதில் வாக்காளர்கள் தங்க வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொட்டகைகளில் தங்கவைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு, வாக்குக்கு பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே, தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொட்டகை அமைக்கும் நடைமுறை தொடருமோ என்ற அச்சத்தால் அவற்றை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாகவும்,

அந்த மனுவில் தொகுதிக்கு வரும் வெளியாட்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும், தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் கே.பி.எம்.ராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனவரி 8-ம் தேதி அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் இதுவரை பதிலளிக்கவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, வாக்காளர்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியதுடன், தேர்தல்களில் யார்தான் சலுகைகள் வழங்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்தனர்.

மேலும், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Tags: Madras High Court orders the Election CommissionMadras High Court ordersElection commissionErode East constituency by electionஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
ShareTweetSendShare
Previous Post

மைனர் பெண் கருக்கலைப்பு : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

சென்னை விமான நிலையத்தில் ரூ. 23 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies