குடியரசுத் தலைவரை விமர்சித்த சோனியா காந்தி: குடியரசுத் தலைவர் எந்த நிலையிலும் சோர்வடையவில்லை - குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்!
Aug 26, 2025, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குடியரசுத் தலைவரை விமர்சித்த சோனியா காந்தி: குடியரசுத் தலைவர் எந்த நிலையிலும் சோர்வடையவில்லை – குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்!

சோனியா காந்திக்கு பாஜக கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசுத்  தலைவர் குறித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் கருத்துக்கள் மோசமானதாக உள்ளன,  இவை துரதிர்ஷ்டவசமானவை என்பதுடன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை  என குடியரசுத்  தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று  குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதில் பங்கேற்ற பின் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, குடியரசு தலைவர் உரையின் இறுதியில் மிகவும் சோர்வடைந்து விட்டார் எனவும் “அவரால் பேச முடியவில்லை, பார்ப்பதற்கு மிகவும் பரிதாபகரமாக இருந்தது” என தெரிவித்தார்.

இந்த கருத்து சர்ச்சையான நிலையில், பாஜக இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசு தலைவரை சோனியா காந்தி அவமதித்துள்ளதாக தெரிவிதுள்ள மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் கட்சி பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு குடியரசு தலைவர் மாளிகை விளக்கமளித்துள்ளது,

நாடாளுமன்றத்தில்  குடியரசுத் தலைவரின் உரை குறித்து காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், உயர் பதவியின் கண்ணியத்தை புண்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. உரையின் முடிவில் குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்து விட்டதாகவும், அவரால் பேச முடியவில்லை என்றும் அந்தத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

உண்மையைத் தெளிவுபடுத்த குடியரசுத் தலைவர் மாளிகை விரும்புகிறது. குடியரசுத் தலைவர் எந்த நிலையிலும் சோர்வடையவில்லை. உண்மையில், அவர் தமது உரையின் போது எந்தத் தருணத்திலும் சோர்வடையவில்லை.

விளிம்புநிலை சமூகங்களுக்காகவும், பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பேசுவதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்பதை அவர் உறுதியாக நம்புகிறார்.

இந்தத் தலைவர்கள் இந்தி போன்ற இந்திய மொழிகளில் உள்ள மரபுத் தொடர்களையும் சொல்லாடல் முறையையும் அறிந்திருக்கவில்லை. அதனால்  தவறான எண்ணம் உருவாகியிருக்கலாம் என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் நம்புகிறது. எவ்வாறாயினும், இத்தகைய கருத்துக்கள் மோசமானதாக உள்ளன. இவை துரதிர்ஷ்டவசமானவை என்பதுடன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: சோனியா காந்திpresident of india draupadi murmupresident of indiapresidents houseSonia Gandhi criticizes the President: The President is not tired at any stage - President's House explanation!குடியரசுத்  தலைவர்
ShareTweetSendShare
Previous Post

நித்தியானந்தா மேல்முறையீடு மனு தள்ளுபடி!

Next Post

திருப்பூர்: காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே கைகலப்பு!

Related News

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

Load More

அண்மைச் செய்திகள்

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

டிஜிபி நியமனத்தில் குளறுபடி : அதிகரிக்கும் அரசியல் தலையீட்டால்!

பளீச் ஹெல்மட்டுடன் பயணம் : சேலம் இரட்டையர்கள் கண்டுபிடித்த சாதனம்!

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவத்தில் அதிகாரிகள் அலட்சியம் – பாஜகவினர் புகார் மனு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனம் : திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என புகார்!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies