குடியரசுத் தலைவரை விமர்சித்த சோனியா காந்தி: குடியரசுத் தலைவர் எந்த நிலையிலும் சோர்வடையவில்லை - குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்!
Jul 11, 2025, 09:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குடியரசுத் தலைவரை விமர்சித்த சோனியா காந்தி: குடியரசுத் தலைவர் எந்த நிலையிலும் சோர்வடையவில்லை – குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்!

சோனியா காந்திக்கு பாஜக கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசுத்  தலைவர் குறித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் கருத்துக்கள் மோசமானதாக உள்ளன,  இவை துரதிர்ஷ்டவசமானவை என்பதுடன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை  என குடியரசுத்  தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று  குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதில் பங்கேற்ற பின் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, குடியரசு தலைவர் உரையின் இறுதியில் மிகவும் சோர்வடைந்து விட்டார் எனவும் “அவரால் பேச முடியவில்லை, பார்ப்பதற்கு மிகவும் பரிதாபகரமாக இருந்தது” என தெரிவித்தார்.

இந்த கருத்து சர்ச்சையான நிலையில், பாஜக இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசு தலைவரை சோனியா காந்தி அவமதித்துள்ளதாக தெரிவிதுள்ள மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் கட்சி பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு குடியரசு தலைவர் மாளிகை விளக்கமளித்துள்ளது,

நாடாளுமன்றத்தில்  குடியரசுத் தலைவரின் உரை குறித்து காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், உயர் பதவியின் கண்ணியத்தை புண்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. உரையின் முடிவில் குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்து விட்டதாகவும், அவரால் பேச முடியவில்லை என்றும் அந்தத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

உண்மையைத் தெளிவுபடுத்த குடியரசுத் தலைவர் மாளிகை விரும்புகிறது. குடியரசுத் தலைவர் எந்த நிலையிலும் சோர்வடையவில்லை. உண்மையில், அவர் தமது உரையின் போது எந்தத் தருணத்திலும் சோர்வடையவில்லை.

விளிம்புநிலை சமூகங்களுக்காகவும், பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பேசுவதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்பதை அவர் உறுதியாக நம்புகிறார்.

இந்தத் தலைவர்கள் இந்தி போன்ற இந்திய மொழிகளில் உள்ள மரபுத் தொடர்களையும் சொல்லாடல் முறையையும் அறிந்திருக்கவில்லை. அதனால்  தவறான எண்ணம் உருவாகியிருக்கலாம் என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் நம்புகிறது. எவ்வாறாயினும், இத்தகைய கருத்துக்கள் மோசமானதாக உள்ளன. இவை துரதிர்ஷ்டவசமானவை என்பதுடன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: president of indiapresidents houseSonia Gandhi criticizes the President: The President is not tired at any stage - President's House explanation!குடியரசுத்  தலைவர்சோனியா காந்திpresident of india draupadi murmu
ShareTweetSendShare
Previous Post

நித்தியானந்தா மேல்முறையீடு மனு தள்ளுபடி!

Next Post

திருப்பூர்: காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே கைகலப்பு!

Related News

2026 தேர்தலிலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – புதுச்சேரி முதல்வர் உறுதி!

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு – ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாக பயன்படுத்த பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!

இந்தியாவில் கால் பதித்த STARLINK : செயற்கைக்கோள் இணைய சேவை பெற விலை என்ன?

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் மூலம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை வந்துள்ளது – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

கோவையில் காரில் சென்ற இளைஞரை சரமாரியாக தாக்கும் காவல்துறையினர்!

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்!

குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!

லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை

புதுக்கோட்டை அருகே மாட்டுவண்டு எல்கை பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள்!

மறைந்த விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டேன் – நடிகர் தியாகு உருக்கம்!

மன்னிப்பு கேட்டால் முன்ஜாமின் – யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவு கொட்டிய வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத்தான் அமையும் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies