ராமநாதபுரம் அருகே அரசு சார்பில் வழங்கிய விதை நெல் முளைக்காமல் போன அவலம். உரிய இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
பால்கரை கிராம மக்கள், நடப்பாண்டில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டனர். வேளாண்மை துறை சார்பில் வழங்கிய விதை நெல்களை வாங்கி விதைத்துள்ளனர்.
இந்த விதை நெல்கள் முறையாக முளைக்காததால், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர் இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டியும், அரசு சார்பில் வழங்கிய விதை நெல் தரமற்ற முறையில் இருப்பதால் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.