அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து மிசோரி மாகாணம் நோக்கி சிறிய ரக விமானம் புறப்பட்டது. மருத்துவ நோயாளியை வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட அந்த விமானத்தில் 6 பேர் பயணித்தனர்.
புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் விபத்து ஏற்பட்ட பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.