திருச்சி மாவட்டம் அதவத்தூர் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பை, பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இதனைதொடர்ந்து பேசிய பள்ளியின் முதல்வர் ஜெயந்தி, மாணவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய சிந்தனைகளை சிதறவிடாமல், கல்வியில் கவனத்தை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.