ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றுள்ளனர்.
நள்ளிரவு 12 மணிக்கு காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போலீசார், இந்த செயலில் பழைய குற்றவாளிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.