புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் தங்க மூக்குத்தி, எலும்பு முனைக்கருவி உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொற்பனைக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்த நிலையில், 9 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மழையால் இந்த அகழாய்வு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி 20ம் தேதி அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், தங்க மூக்குத்தி, எலும்பு முனைக்கருவி உள்ளிட்ட அரிய பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.