தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
எல்.பி. நகர் பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமியை தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அந்தப் பணியில் ஈடுபட்டி ருந்த 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒருவரின் உடலை மீட்டனர். மேலும், 2 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.