எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.
அவருக்கு வயது 87. கடந்த 1958-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘செங்கோட்டை சிங்கம்’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஏராளமான மொழிப் படங்களில் நடித்து கவனம் பெற்ற இவர், வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.