இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் 5 வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அணிப்பட்டியலில் பும்ரா பெயர் இடம் பெறவில்லை. இதன் மூலம் பும்ரா விலகியது உறுதியாகியுள்ளது.