திருச்சி : உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!
Sep 10, 2025, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி : உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே நிலப்பிரச்சினை காரணமாக ஹெல்மெட்டால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், அவரது இறப்புக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் வசித்து வரும் ரகுநாத் என்பவரது மனைவி ஜீவா என்பவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மாலதி என்பவருக்கும் இடையே, நிலப்பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஜீவாவும், அவரது கணவரும் சென்றபோது, மாலதியின் மகன் வசந்தகுமார் உள்ளிட்ட சிலர் வழிமறித்து ஹெல்மெட் உள்ளிட்டவையால் தாக்கியுள்ளனர்.

இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜீவா, குளித்தலையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது சடலத்தை அத்தாணி கொண்டு வந்தபோது, அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஜீவாவின் இறப்புக்கு நியாயம் கேட்டும், அவரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜீவா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: tamil nadu newsThe relatives of Trichy's dead woman blocked the road demanding justice!
ShareTweetSendShare
Previous Post

வேலூர் : டயர் வெடித்து விபத்துக்குள்ளான மீன் வேன்!

Next Post

விடாமுயற்சி திரைப்படம் வெளியீடு : கார் பயிற்சியில் அஜித்!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies