மக்களை இணைப்பதுதான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் பணி : வானதி சீனிவாசன்
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்களை இணைப்பதுதான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் பணி : வானதி சீனிவாசன்

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை பேசும் ராகுல் காந்தி காங்கிரஸை வழிநடத்துவது பேரபாயம் என்று பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று திமுக நடத்திய போராட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மொழிகள், கலாசாரங்கள், பாரம்பரியங்கள், வரலாறுகளை மதிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் தனது கருத்தான, ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம், ஒரு மொழி என்பதை அடைவதற்காக அரசியலமைப்பை தாக்குகிறது.

யுஜிசி வரைவு நெறிமுறைகள் வெறும் கல்வி சார்ந்த நகர்வல்ல, அது தமிழகத்தின் வளமான மரபின் மீதும், இந்தியக் கூட்டாட்சியியலின் அடிப்படை மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்” என்று தெரிவித்துள்ளார்.

கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளுக்கும் அதிகாரம் கொண்ட பொதுப்பட்டியலில் உள்ளது. இதில் மாநில அரசு மட்டும் தன்னிச்சையாக பல்கலைக்கழகங்களை கட்டுக்குள் வைத்திருக்க கூடாது என்பதற்காக, புதிய விதிகளை யுஜிசி உருவாக்கியுள்ளது. அதுபற்றி கருத்துகளை கேட்டுள்ளது.

அதில் திருத்தங்களை மாநில அரசுகள் தெரிவிக்கலாம். ஆனால், இதை வைத்து திமுக தனது பிரிவினை அரசியலை மேலும் கூர்தீட்டுகிறது. இந்தியா என்பது நாடல்ல, மாநிலங்களின் ஒன்றியம் என்பது திமுகவின் பிரிவினை சித்தாந்தம்.

அதையே ராகுல் காந்தி திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார். ‘தேசம் முதலில்’ என்பதுதான் பாஜகவின் கொள்கை. திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை முன்மொழிபவர், தேசிய கட்சியான காங்கிரஸை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பது பேரபாயம்.

தேசத்தை இணைப்பதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் கொள்கை!

மொழி, மதம், இனம், ஜாதி, வேறுபாடுகளை கடந்து அனைவரும் பாரதியர்கள் என்று உணர வேண்டும் என்பதற்காக 100 ஆண்டுகளாக செயல்படும் இயக்கம் ஆர்எஸ்எஸ். மக்களை இணைப்பதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் பணி. ஆனால், ‘வட மாநிலங்கள் – தென் மாநிலங்கள்’, ‘மாநில மொழிகள் – இந்தி’, ‘இந்துக்கள் – சிறுபான்மையினர்’ என மக்களைப் பிரித்து வருகிறார் ராகுல் காந்தி என்று தெரிவித்துள்ளார்.

திமுகவினர் பாஜகவை விமர்சிக்கும் போதெல்லாம் உத்தரப்பிரதசம், பீகார் மாநில மக்களோடு ஒப்பிட்டு கேலி செய்கிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேசத்திலிருந்து எம்.பியாக இருக்கும் ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும், கொஞ்சமும் கூச்சமில்லாமல் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதைவிட உத்தரப்பிரதேச மக்களை யாரும் அவமதிக்க முடியாது.

காங்கிரஸ் குறிப்பாக நேரு குடும்பத்தினர் மத்தியில் நடத்திய சர்வாதிகார ஆட்சியில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தார்கள். 1975 முதல் 1977 வரை எமர்ஜென்சியை அமல்படுத்தி, அரசியலமைப்பு சட்டத்தை முடக்கியது காங்கிரஸ் கட்சி. இப்படி, அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்தவர்கள், இன்று, ஆர்எஸ்எஸ், பாஜக மீது கல்லெறிகிறார்கள்.

யார் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கிறார்கள், யார் மாநிலங்களை சமமாக நடத்துகிறார்கள், யார் அனைத்து மொழிகள், கலாசாரத்தை, உரிமைகளையும் மதித்து நாட்டை இணைக்கிறார்கள் என்பதை மக்கள் நன்கறிவார்கள். பிரிவினை பேசும் திமுகவையும், அந்த வழியில் பயணிக்கும் ராகுல் காந்தியையும் இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: The policy of RSSBJP is to unite the nation: Vanathi Srinivasan is proud!
ShareTweetSendShare
Previous Post

சென்னை ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்துடனான ரூ. 230 கோடி ஒப்பந்தம் ரத்து – மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை!

Next Post

புதுமணப்பெண்ணின் தாலி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies