மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : 4 பேர் கைது!
Jun 16, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : 4 பேர் கைது!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக போராட்டம் நடைபெற்ற நிலையில், பள்ளியின் தாளாளர், அறங்காவலர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பள்ளியின் அறங்காவலரும், தாளாளரின் கணவருமான வசந்தகுமார் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த பெற்றோரும், உறவினர்களும் பள்ளிக்கு சென்று வசந்தகுமாரை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த அவரை போலீசார் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதனிடையே, பாலியல் தொல்லை அளித்த அறங்காவலர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பள்ளிக்குள் புகுந்து அலுவலகத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கினர். வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து கவிழ்த்தனர்.

இதனை தொடர்ந்து, பள்ளி தாளாளர், முதல்வர், நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அறங்காவலர் வசந்தகுமார், தாளாளர் சுதா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக தலைமை ஆசிரியை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து கைதான 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். மேலும், பள்ளியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய மாணவியின் உறவினர்கள்,
பாலியல் புகாருக்கு உள்ளான தனியார் பள்ளியை மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மாணவிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து தனியார் பள்ளிகளிலும் 2 பெண் காவலர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tn schoolSexual harassment of 4th class student in Manaparai private school: 4 people arrested!
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : திமுக துணைத் தலைவரின் மனைவி வெட்டி படுகொலை!

Next Post

தியானத்தின் மூலம் மன அமைதி, நிம்மதி : வெளிப்படையாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

Related News

முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக சென்ற அரசு பேருந்துகள் – பொதுமக்கள் அவதி!

ஜம்புதீவு பிரகடன தினத்தில் மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்துவோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

திருப்பூர் : நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர் – வீடியோ வைரல்!

மருது சகோதரர்களின் வீரத்தை போற்றுவோம் – நயினார் நாகேந்திரன்

பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் : சீமான் பங்கேற்பு!

பாபநாசம் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்!

தமிழகத்தில் மே மாதத்தில் ஆட்டோமொபைல் சில்லறை விற்பனை சரிவு!

பிரதமர் மோடியின் தலைமையில், நாடு முழுவதும் காவல் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது –  அமித்ஷா

ரூ.210 கோடி வசூலை தாண்டிய ஹவுஸ் புல் 5!

உத்தரப்பிரதேசம் : ஹஜ் பயணிகள் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ!

இன்றைய தங்கம் விலை!

அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 29 சென்டி மீட்டர் மழைப் பதிவு!

இந்தியா – பாகிஸ்தான் போல ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் – டிரம்ப் வலியுறுத்தல்!

‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் அப்டேட் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies