மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : 4 பேர் கைது!
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 03:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக போராட்டம் நடைபெற்ற நிலையில், பள்ளியின் தாளாளர், அறங்காவலர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பள்ளியின் அறங்காவலரும், தாளாளரின் கணவருமான வசந்தகுமார் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த பெற்றோரும், உறவினர்களும் பள்ளிக்கு சென்று வசந்தகுமாரை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த அவரை போலீசார் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதனிடையே, பாலியல் தொல்லை அளித்த அறங்காவலர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பள்ளிக்குள் புகுந்து அலுவலகத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கினர். வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து கவிழ்த்தனர்.

இதனை தொடர்ந்து, பள்ளி தாளாளர், முதல்வர், நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அறங்காவலர் வசந்தகுமார், தாளாளர் சுதா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக தலைமை ஆசிரியை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து கைதான 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். மேலும், பள்ளியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய மாணவியின் உறவினர்கள்,
பாலியல் புகாருக்கு உள்ளான தனியார் பள்ளியை மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மாணவிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து தனியார் பள்ளிகளிலும் 2 பெண் காவலர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tn schoolSexual harassment of 4th class student in Manaparai private school: 4 people arrested!
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பத்தூர் : திமுக துணைத் தலைவரின் மனைவி வெட்டி படுகொலை!

Next Post

தியானத்தின் மூலம் மன அமைதி, நிம்மதி : வெளிப்படையாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies