ராணுவ விமானம், கை விலங்கு : உலக நாடுகளுக்கு ட்ரம்ப் உணர்த்துவது என்ன?
Mar 15, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராணுவ விமானம், கை விலங்கு : உலக நாடுகளுக்கு ட்ரம்ப் உணர்த்துவது என்ன?

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை மற்றும் கால்களில் விலங்கு போடப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ராணுவ விமானத்தை ட்ரம்ப் அரசு ஏன் பயன்படுத்துகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மெக்சிகோ எல்லையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதுடன் நாடு கடத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி பிரேசில், கொலம்பியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு சி 17 என்னும் ராணுவ விமானத்தை அமெரிக்கா பயன்படுத்துகிறது. பயணிகள் விமானத்தோடு ஒப்பிடுகையில் சி 17-க்கு ஆகும் செலவு 5 மடங்கு அதிகம். அப்படியிருந்தும் அதை பயன்படுத்துவதன் மூலம் சில செய்திகளை இந்த உலகுக்கு உணர்த்த முயல்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

உரிய ஆணவங்களின்றி ஒரு நாட்டில் வசிப்பவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் ட்ரம்போ, ‘ஏலியன்கள்’, ‘குற்றவாளிகள்’, ‘சட்டவிரோதமாக படையெடுத்தவர்கள்’ என்றெல்லாம் கூறிவருகிறார். அவர் நினைத்தால் கொஞ்சம் கண்ணியத்துடன் சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்ற முடியும். எனினும் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தவே கை மற்றும் கால்களில் விலங்குபோடுவது, ராணுவ விமானத்தை பயன்படுத்துவது போன்ற செயல்களை ட்ரம்ப் செய்வதாகக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தொடர்பாக அமெரிக்காவில் சில சட்டங்கள் இருப்பதாகவும் அதன்படியே அந்த நாடு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அண்மையில் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், “சட்டவிரோதமாக வந்த ஏலியன்களை ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்புவது இதுவே முதன்முறை. இவ்வளவு நாட்கள் நம்மை முட்டாள் என்று நினைத்தவர்கள் இப்போது நம்மை மதிக்கிறார்கள்” என்றார். மேலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து சிறையில் அடைத்து, மேல்முறையீடு செய்யும் அவகாசத்தை அவர்களுக்கு வழங்க ட்ரம்ப் விரும்பவில்லை.

சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றும் பணி தொடங்கிய அன்றே அதுகுறித்த புகைப்படங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டது. உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் வசித்த வெளிநாட்டினர் கை – கால்களில் விலங்கோடு விமானத்தில் ஏற்றப்படும் அந்தப் புகைப்படங்கள் மூலம், சட்டவிரோதமாக குடியேறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை ட்ரம்ப் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் ராணுவ விமானம் தரையிறங்க மெக்சிகோ அனுமதி மறுத்தது. அதன் காரணமாகவே அந்நாட்டுக்கு 25 விழுக்காடு வரி விதித்தார் ட்ரம்ப். இதன்மூலம் யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமது நடவடிக்கைகள் தொடரும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அமெரிக்க அதிபர். இந்த விவகாரம் நம் நாட்டு நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியதும் இங்கே குறிப்பிடவேண்டிய மற்றொரு செய்தி.

Tags: Indiausadonald trump 2025Military planehand animal: What does Trump mean to the world?
ShareTweetSendShare
Previous Post

ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!

Next Post

DEEPSEEK AI-க்கு எதிர்ப்பு : சீனாவுக்கு உளவு பார்க்க வடிவமைப்பு என புகார்!

Related News

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies