ராணுவ விமானம், கை விலங்கு : உலக நாடுகளுக்கு ட்ரம்ப் உணர்த்துவது என்ன?
Jul 26, 2025, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராணுவ விமானம், கை விலங்கு : உலக நாடுகளுக்கு ட்ரம்ப் உணர்த்துவது என்ன?

Web Desk by Web Desk
Feb 7, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை மற்றும் கால்களில் விலங்கு போடப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ராணுவ விமானத்தை ட்ரம்ப் அரசு ஏன் பயன்படுத்துகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மெக்சிகோ எல்லையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதுடன் நாடு கடத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி பிரேசில், கொலம்பியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு சி 17 என்னும் ராணுவ விமானத்தை அமெரிக்கா பயன்படுத்துகிறது. பயணிகள் விமானத்தோடு ஒப்பிடுகையில் சி 17-க்கு ஆகும் செலவு 5 மடங்கு அதிகம். அப்படியிருந்தும் அதை பயன்படுத்துவதன் மூலம் சில செய்திகளை இந்த உலகுக்கு உணர்த்த முயல்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

உரிய ஆணவங்களின்றி ஒரு நாட்டில் வசிப்பவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் ட்ரம்போ, ‘ஏலியன்கள்’, ‘குற்றவாளிகள்’, ‘சட்டவிரோதமாக படையெடுத்தவர்கள்’ என்றெல்லாம் கூறிவருகிறார். அவர் நினைத்தால் கொஞ்சம் கண்ணியத்துடன் சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்ற முடியும். எனினும் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தவே கை மற்றும் கால்களில் விலங்குபோடுவது, ராணுவ விமானத்தை பயன்படுத்துவது போன்ற செயல்களை ட்ரம்ப் செய்வதாகக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தொடர்பாக அமெரிக்காவில் சில சட்டங்கள் இருப்பதாகவும் அதன்படியே அந்த நாடு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அண்மையில் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், “சட்டவிரோதமாக வந்த ஏலியன்களை ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்புவது இதுவே முதன்முறை. இவ்வளவு நாட்கள் நம்மை முட்டாள் என்று நினைத்தவர்கள் இப்போது நம்மை மதிக்கிறார்கள்” என்றார். மேலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து சிறையில் அடைத்து, மேல்முறையீடு செய்யும் அவகாசத்தை அவர்களுக்கு வழங்க ட்ரம்ப் விரும்பவில்லை.

சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றும் பணி தொடங்கிய அன்றே அதுகுறித்த புகைப்படங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டது. உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் வசித்த வெளிநாட்டினர் கை – கால்களில் விலங்கோடு விமானத்தில் ஏற்றப்படும் அந்தப் புகைப்படங்கள் மூலம், சட்டவிரோதமாக குடியேறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை ட்ரம்ப் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் ராணுவ விமானம் தரையிறங்க மெக்சிகோ அனுமதி மறுத்தது. அதன் காரணமாகவே அந்நாட்டுக்கு 25 விழுக்காடு வரி விதித்தார் ட்ரம்ப். இதன்மூலம் யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமது நடவடிக்கைகள் தொடரும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அமெரிக்க அதிபர். இந்த விவகாரம் நம் நாட்டு நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியதும் இங்கே குறிப்பிடவேண்டிய மற்றொரு செய்தி.

Tags: hand animal: What does Trump mean to the world?Indiausadonald trump 2025Military plane
ShareTweetSendShare
Previous Post

ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!

Next Post

DEEPSEEK AI-க்கு எதிர்ப்பு : சீனாவுக்கு உளவு பார்க்க வடிவமைப்பு என புகார்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies