ராணுவ விமானம், கை விலங்கு : உலக நாடுகளுக்கு ட்ரம்ப் உணர்த்துவது என்ன?
Oct 28, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராணுவ விமானம், கை விலங்கு : உலக நாடுகளுக்கு ட்ரம்ப் உணர்த்துவது என்ன?

Web Desk by Web Desk
Feb 7, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை மற்றும் கால்களில் விலங்கு போடப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ராணுவ விமானத்தை ட்ரம்ப் அரசு ஏன் பயன்படுத்துகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மெக்சிகோ எல்லையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதுடன் நாடு கடத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி பிரேசில், கொலம்பியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு சி 17 என்னும் ராணுவ விமானத்தை அமெரிக்கா பயன்படுத்துகிறது. பயணிகள் விமானத்தோடு ஒப்பிடுகையில் சி 17-க்கு ஆகும் செலவு 5 மடங்கு அதிகம். அப்படியிருந்தும் அதை பயன்படுத்துவதன் மூலம் சில செய்திகளை இந்த உலகுக்கு உணர்த்த முயல்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

உரிய ஆணவங்களின்றி ஒரு நாட்டில் வசிப்பவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் ட்ரம்போ, ‘ஏலியன்கள்’, ‘குற்றவாளிகள்’, ‘சட்டவிரோதமாக படையெடுத்தவர்கள்’ என்றெல்லாம் கூறிவருகிறார். அவர் நினைத்தால் கொஞ்சம் கண்ணியத்துடன் சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்ற முடியும். எனினும் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தவே கை மற்றும் கால்களில் விலங்குபோடுவது, ராணுவ விமானத்தை பயன்படுத்துவது போன்ற செயல்களை ட்ரம்ப் செய்வதாகக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தொடர்பாக அமெரிக்காவில் சில சட்டங்கள் இருப்பதாகவும் அதன்படியே அந்த நாடு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அண்மையில் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், “சட்டவிரோதமாக வந்த ஏலியன்களை ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்புவது இதுவே முதன்முறை. இவ்வளவு நாட்கள் நம்மை முட்டாள் என்று நினைத்தவர்கள் இப்போது நம்மை மதிக்கிறார்கள்” என்றார். மேலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து சிறையில் அடைத்து, மேல்முறையீடு செய்யும் அவகாசத்தை அவர்களுக்கு வழங்க ட்ரம்ப் விரும்பவில்லை.

சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றும் பணி தொடங்கிய அன்றே அதுகுறித்த புகைப்படங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டது. உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் வசித்த வெளிநாட்டினர் கை – கால்களில் விலங்கோடு விமானத்தில் ஏற்றப்படும் அந்தப் புகைப்படங்கள் மூலம், சட்டவிரோதமாக குடியேறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை ட்ரம்ப் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் ராணுவ விமானம் தரையிறங்க மெக்சிகோ அனுமதி மறுத்தது. அதன் காரணமாகவே அந்நாட்டுக்கு 25 விழுக்காடு வரி விதித்தார் ட்ரம்ப். இதன்மூலம் யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமது நடவடிக்கைகள் தொடரும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அமெரிக்க அதிபர். இந்த விவகாரம் நம் நாட்டு நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியதும் இங்கே குறிப்பிடவேண்டிய மற்றொரு செய்தி.

Tags: Indiausadonald trump 2025Military planehand animal: What does Trump mean to the world?
ShareTweetSendShare
Previous Post

ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!

Next Post

DEEPSEEK AI-க்கு எதிர்ப்பு : சீனாவுக்கு உளவு பார்க்க வடிவமைப்பு என புகார்!

Related News

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

Load More

அண்மைச் செய்திகள்

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies