ஏ.ஐ. உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏ.ஐ. உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி தலைமையேற்கவுள்ளார். இதற்காக பாரீஸ் சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து, பிரான்ஸில் வாழும் இந்திய வம்சாவளியினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வழிநெடுகிலும் காத்திருந்தனர். அவர்களை சந்தித்து உரையாற்றிய பிரதமர், அன்பை வெளிக்காட்ட கடுமையான குளிர்கூட தடையாக இருக்கவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பின்னர், பிரான்ஸ் அதிபரை சந்தித்த பிரதமர் மோடி,அவருடன் இரவு விருந்தில் கலந்துகொண்டார். அப்போது அமெரிக்க துணை அதிபரான ஜேடி வான்ஸை சந்தித்து பிரதமர் கலந்துரையாடினார்.