மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசியை சேர்ந்த 8 மாணவர்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த 80 மாணவர்கள் போட்டியில் பங்கேற்ற நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து 14 மாணவ – மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
குறிப்பாக 8 மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கம் வென்று அசத்தியுள்ளனர். இதையடுத்து சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.