கோயிலுக்கு செல்லும் பக்தர்களை திமுக அரசு தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,
தைப்பூசத்தன்று முருகன் கோயில்களில் அதிகளவு பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்தும் அறநிலையத்துறை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
உண்டியல் காணிக்கை, பிரசாத விற்பனை உள்ளிட்ட வழிகளில் இந்து சமய அறநிலையத்துறை பல கோடி வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ள அவர், தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
பக்தர்களை அவதிக்குள்ளாக்கினால் ஏழ்மையான பக்தர்கள் கோயிலுக்கு வர மாட்டார்கள் என திமுக அரசு நினைப்பதாக விமர்சித்துள்ள அவர், திமுக இந்து விரோத அரசு என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.