விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 2 பெண்கள் உள்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் அனைவரும், விரைவாக நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கவும், அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கவும், தமிழக அரசை அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.