"கோயில் குளத்தை காணோம்" : பார்க்கிங் இடமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!
Jul 24, 2025, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“கோயில் குளத்தை காணோம்” : பார்க்கிங் இடமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Feb 15, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வியாசர்பாடியில் உள்ள பழமையான கோயில் குளத்தை அறநிலையத்துறையே ஆக்கிரமித்து, அரசு பார்க்கிங் இடமாக மாற்றி வாடகை வசூலித்து வருவதால் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

திரைப்பட காமெடி காட்சியொன்றில் நடிகர் வடிவேலு, “ஐயோ என் கிணத்த காணோம்… என் கிணத்த காணோம்” என கதறி கதறி அழுது நடித்திருப்பார். அதேபோல, சென்னை வியாசர்பாடி பகுதி மக்களும் தங்கள் பகுதியில் இருந்த “கோயில் குளத்த காணோம்” என பரிதவிப்பதுடன், அறநிலையத்துறை மௌனம் கலைத்து தங்கள் பிரச்சனைக்கு தீர்வளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், மிகப்பழமையான இரவீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான குளம் தற்போது இருந்த இடமே தெரியாமல் மாயமாகி, கோயில் பார்க்கிங் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதே அப்பகுதி மக்களின் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.

அங்குள்ள EH சாலையில் சுமார் 60 ஆயிரம் சுதுர அடி பரப்பளவில், இரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான குளம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. அந்த குளத்தை ஒட்டிய கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பொதுமக்கள் குடியிருப்புகளை கட்டிய நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலத்தை திருப்பி ஒப்படைக்குமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது கோயில் நிர்வாகம். அத்துடன் கோயில் குளத்தை விரைவில் தூர்வாரி, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றப்போவதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஆனால் நடந்ததோ அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டபோது, அதனுடன் சேர்த்து கோயில் குளமும் மூடப்பட்டது. குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் தரைமட்டமாக்கப்பட்ட அந்த இடத்தில், கோயில் நிர்வாகத்தினர் பார்க்கிங் அமைத்து வாடகை வசூலித்து வருவது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிந்து குளத்தை சென்றடைந்ததால், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்திருந்தது. ஆனால் தற்போது குளம் மூடப்பட்டுவிட்ட நிலையில் மழைநீர் வடிய வழியின்றி, வீடுகளை சூழ்ந்துகொள்வது அப்பகுதி மக்களை அதிருப்தியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

நியாயம் கேட்கச் செல்லும் பொதுமக்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை கூறும் கோயில் நிர்வாகம், அவர்கள் மீது காவல் துறையை ஏவி மிரட்டல் விடுப்பதாகவும், திருக்கோயில் பெயரைச் சொல்லி ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாக அங்குள்ள பார்கிங்கை அகற்றி, கோயில் குளத்தை மீட்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து குளம் மீட்டெடுக்கப்படும் பட்சத்தில், அதனைச் சுற்றி நடைபயிற்சி தடமும், இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும் அமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

Tags: tn temple"Let's see the temple pond" : People shocked as it turned into a parking lot!மிகப்பழமையான இரவீஸ்வரர் கோயில்இந்து சமய அறநிலையத்துறை
ShareTweetSendShare
Previous Post

இந்திய சாலைகள் அமெரிக்காவையே விஞ்சிவிட்டன : நிதின் கட்கரி

Next Post

பிரான்ஸ், அமெரிக்கா பயணம் நிறைவு – நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies