"கோயில் குளத்தை காணோம்" : பார்க்கிங் இடமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!
Sep 12, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“கோயில் குளத்தை காணோம்” : பார்க்கிங் இடமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Feb 15, 2025, 06:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை வியாசர்பாடியில் உள்ள பழமையான கோயில் குளத்தை அறநிலையத்துறையே ஆக்கிரமித்து, அரசு பார்க்கிங் இடமாக மாற்றி வாடகை வசூலித்து வருவதால் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

திரைப்பட காமெடி காட்சியொன்றில் நடிகர் வடிவேலு, “ஐயோ என் கிணத்த காணோம்… என் கிணத்த காணோம்” என கதறி கதறி அழுது நடித்திருப்பார். அதேபோல, சென்னை வியாசர்பாடி பகுதி மக்களும் தங்கள் பகுதியில் இருந்த “கோயில் குளத்த காணோம்” என பரிதவிப்பதுடன், அறநிலையத்துறை மௌனம் கலைத்து தங்கள் பிரச்சனைக்கு தீர்வளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், மிகப்பழமையான இரவீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான குளம் தற்போது இருந்த இடமே தெரியாமல் மாயமாகி, கோயில் பார்க்கிங் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதே அப்பகுதி மக்களின் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.

அங்குள்ள EH சாலையில் சுமார் 60 ஆயிரம் சுதுர அடி பரப்பளவில், இரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான குளம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. அந்த குளத்தை ஒட்டிய கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பொதுமக்கள் குடியிருப்புகளை கட்டிய நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலத்தை திருப்பி ஒப்படைக்குமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது கோயில் நிர்வாகம். அத்துடன் கோயில் குளத்தை விரைவில் தூர்வாரி, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றப்போவதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஆனால் நடந்ததோ அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டபோது, அதனுடன் சேர்த்து கோயில் குளமும் மூடப்பட்டது. குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் தரைமட்டமாக்கப்பட்ட அந்த இடத்தில், கோயில் நிர்வாகத்தினர் பார்க்கிங் அமைத்து வாடகை வசூலித்து வருவது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிந்து குளத்தை சென்றடைந்ததால், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்திருந்தது. ஆனால் தற்போது குளம் மூடப்பட்டுவிட்ட நிலையில் மழைநீர் வடிய வழியின்றி, வீடுகளை சூழ்ந்துகொள்வது அப்பகுதி மக்களை அதிருப்தியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

நியாயம் கேட்கச் செல்லும் பொதுமக்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை கூறும் கோயில் நிர்வாகம், அவர்கள் மீது காவல் துறையை ஏவி மிரட்டல் விடுப்பதாகவும், திருக்கோயில் பெயரைச் சொல்லி ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாக அங்குள்ள பார்கிங்கை அகற்றி, கோயில் குளத்தை மீட்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து குளம் மீட்டெடுக்கப்படும் பட்சத்தில், அதனைச் சுற்றி நடைபயிற்சி தடமும், இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும் அமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

Tags: tn temple"Let's see the temple pond" : People shocked as it turned into a parking lot!மிகப்பழமையான இரவீஸ்வரர் கோயில்இந்து சமய அறநிலையத்துறை
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய சாலைகள் அமெரிக்காவையே விஞ்சிவிட்டன : நிதின் கட்கரி

Next Post

பிரான்ஸ், அமெரிக்கா பயணம் நிறைவு – நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies