முறை தவறிய உறவால் விபரீதம் : மனைவியை கொன்ற கணவன் - நிர்கதியான குழந்தைகள்!
Aug 24, 2025, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முறை தவறிய உறவால் விபரீதம் : மனைவியை கொன்ற கணவன் – நிர்கதியான குழந்தைகள்!

Web Desk by Web Desk
Feb 14, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனைவியை அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று, கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். எங்கு நடந்தது இந்த கொடூர சம்பவம்? கொலைக்கான காரணம் என்ன? பின்வரும் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகேயுள்ள செங்குந்தபுரம் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபால் – மணிமேகலா தம்பதியர். இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ள நிலையில், கோபால் வெல்டிங் மற்றும் ஐஸ் விற்கும் வேலைகளுக்கு சென்று வருமானம் ஈட்டி வந்துள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோபால் தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதால், அவருக்கும் மனைவி மணிமேகலாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையே கோபால் மணிமேகலாவின் செல்போனில், அவர் தனது ஆண் நண்பருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதுபற்றி கேட்டு கோபால் சண்டையிட்ட நிலையில், மணிமேகலா சேர்ந்து வாழ விருப்பமில்லை என கூறியுள்ளார்.

இதனால் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி சித்தோடு காவல் நிலையத்தில் கோபால் முறையிட்டுள்ளார். அதனடிப்படையில் போலீசார் மணிமேகலாவை காவல் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது போலீசாரிடமும் தனக்கு கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என மணிமேகலா கூற, நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்துகொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய கோபால் சென்னிமலை சாலையில் உள்ள ஐடிஐ அருகே தங்கி வந்துள்ளார். பின்னர் தனியாக இரு மகன்களையும் கவனித்துக்கொள்ள தொடங்கிய மணிமேகலா, சித்தோடு வசுவப்பட்டியில் உள்ள மிக்சர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக மணிமேகலா பள்ளியில் தன்னுடன் படித்த, கறிவெட்டும் தொழிலாளியான மோகன்ராஜுடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மணிமேகலா மிக்சர் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த கோபால், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிமேகலாவை சக தொழிலாளர்கள் மீட்டு சித்தோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிமேகலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே கோபால் சித்தோடு கிராம நிர்வாக அலுவலர் முன்பு கொலை செய்த கத்தியுடன் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் சித்தோடு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

சேர்ந்து வாழுமாறு பலமுறை எடுத்துக்கூறியும் கேட்காமல், ஆண் நண்பருடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், மணிமேகலாவை கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து கோபாலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாய் கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தையும் சிறைக்கு சென்றதால், அவர்களின் விவரமறியாத இரு மகன்கள் நிர்க்கதியாக நிற்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: special storycrime storytamil nadu news todayTn newsTragedy due to improper relationship: husband who killed his wife - orphaned children!
ShareTweetSendShare
Previous Post

ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்?

Next Post

Downgrade என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விளக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies