முறை தவறிய உறவால் விபரீதம் : மனைவியை கொன்ற கணவன் - நிர்கதியான குழந்தைகள்!
Jul 29, 2026, 12:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முறை தவறிய உறவால் விபரீதம் : மனைவியை கொன்ற கணவன் – நிர்கதியான குழந்தைகள்!

Murugesan M by Murugesan M
Feb 14, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனைவியை அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று, கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். எங்கு நடந்தது இந்த கொடூர சம்பவம்? கொலைக்கான காரணம் என்ன? பின்வரும் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகேயுள்ள செங்குந்தபுரம் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபால் – மணிமேகலா தம்பதியர். இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ள நிலையில், கோபால் வெல்டிங் மற்றும் ஐஸ் விற்கும் வேலைகளுக்கு சென்று வருமானம் ஈட்டி வந்துள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோபால் தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதால், அவருக்கும் மனைவி மணிமேகலாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையே கோபால் மணிமேகலாவின் செல்போனில், அவர் தனது ஆண் நண்பருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதுபற்றி கேட்டு கோபால் சண்டையிட்ட நிலையில், மணிமேகலா சேர்ந்து வாழ விருப்பமில்லை என கூறியுள்ளார்.

இதனால் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி சித்தோடு காவல் நிலையத்தில் கோபால் முறையிட்டுள்ளார். அதனடிப்படையில் போலீசார் மணிமேகலாவை காவல் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது போலீசாரிடமும் தனக்கு கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என மணிமேகலா கூற, நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்துகொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய கோபால் சென்னிமலை சாலையில் உள்ள ஐடிஐ அருகே தங்கி வந்துள்ளார். பின்னர் தனியாக இரு மகன்களையும் கவனித்துக்கொள்ள தொடங்கிய மணிமேகலா, சித்தோடு வசுவப்பட்டியில் உள்ள மிக்சர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக மணிமேகலா பள்ளியில் தன்னுடன் படித்த, கறிவெட்டும் தொழிலாளியான மோகன்ராஜுடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மணிமேகலா மிக்சர் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த கோபால், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிமேகலாவை சக தொழிலாளர்கள் மீட்டு சித்தோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிமேகலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே கோபால் சித்தோடு கிராம நிர்வாக அலுவலர் முன்பு கொலை செய்த கத்தியுடன் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் சித்தோடு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

சேர்ந்து வாழுமாறு பலமுறை எடுத்துக்கூறியும் கேட்காமல், ஆண் நண்பருடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், மணிமேகலாவை கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து கோபாலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாய் கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தையும் சிறைக்கு சென்றதால், அவர்களின் விவரமறியாத இரு மகன்கள் நிர்க்கதியாக நிற்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: tamil nadu news todayTn newsTragedy due to improper relationship: husband who killed his wife - orphaned children!special storycrime story
ShareTweetSendShare
Previous Post

ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்?

Next Post

Downgrade என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விளக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies