உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது… காதலர் தினம் உருவானது எப்படி ? காதலர் தினத்தை பற்றிய சுவாரஸ்ய தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…!
நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து
நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமு கத்தைக்
கோலமுழுதும் காட்டிவிட்டாற் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ?”
உள்ளம் உருக்கி, உயிர் உருக்கி, மேல்வியர்வை
வெள்ளம் பெருக்கியே மேனிதனைப் பொசுக்கி
ஓடையின் ஓரம் உயர்சோலைக்குள் என்னைக்
கோடை துரத்திடநான் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
இப்படி காவியக்காலம் தொடங்கி இந்த கம்பியூட்டர் காலம்வரை காதலை கொண்டாடும் விதம் மாறினாலும் காதல் என்றும் மாறாமல் இருந்துவருது… கொஞ்சம் வரலாறை திரும்பி பார்த்தோம்னா… புராணங்கங்கள் தொடங்கி சினிமாவரைக்கும் மனித வாழ்க்கையில பொதுவா இருக்குறது காதல்மட்டும்தான்…இப்படி நம்ம வாழ்க்கையோட முக்கிய அங்கமா இருக்க காதலுக்குனு தனி அடையாளங்களும் இருக்கு… காதலுக்கு பேர்போன இடங்களும் இருக்கு… இதெல்லாம்விட காதல்னா என்னனு நமக்கு பாடம் எடுக்குற அளவுக்கு சில காதல் கதைகளும் இருக்கு… அப்படிபட்ட காதலர் தினத்தை எப்படி எல்லாம் கொண்டாடுறாங்க ?…. காதலர்தினத்துல நடக்குற சில சுவாரஸ்ய நிகழ்வுகளை பத்திலான்… வாங்க இந்த தொகுப்புல முழுசா பார்க்கலாம்.
ஒவ்வொரு மாசத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கு… அப்படி பிப்ரவரி மாதம்னு சொன்னதும் நம்ம மைண்டுக்கு முதல்ல நியாபகம் வர்ர விஷயம் பிப்ரவரி 14 Valentines day… உலக மக்கள் சந்தோஷமா கொண்டாடுற இந்த Valentines day-க்கு பின்னாடி குட்டி வரலாறும் இருக்கு….
கி.பி. 269 நூற்றாண்டுல ரோமை ஆட்சி செய்த ரோமானிய அரசர் கிளாடியுஸ் மிமி… நாட்டுல இருக்க ஆண்கள் யாரும் திருமணம் செய்யகூடாதுனு உத்தரவு போடுறாரு… இதுனால நாட்டு மக்கள் எல்லாருமே சோகத்துல மூழ்கிபோறாங்க… அப்போதான் பாதிரியார் வாலண்டைன் என்பவர் அரசருக்கு தெரியாம காதலர்களுக்கு திருமணம் செய்துவைக்குறாரு… ஒருகட்டத்துல இந்த விஷயம் அரசுக்கு தெரியவர
Priest valentine அவர்கள சிறையில அடைச்சு பிறகு தலையை துண்டிச்சு மரண தண்டனைய கொடுத்துட்றாங்க… Priest valentine மரணிச்ச நாள் பிப்ரவரி 14… இதுனாலதான் ஒவ்வொரு வருஷம் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்த Priest valentine-அ பெருமைபடுத்த Valentines day கொண்டாடப்பட்டு வருது.
ஆரம்ப காலகட்டத்துல பிப்ரவரி 14 மட்டுதான் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வந்துச்சு… ஆனா, Valentines day -வ வர்த்தக ரீதியா பயன்படுத்திக்குற விதமா பிப்ரவரி 7-ஆம் தேதி ஆரமிச்சு பிப்ரவரி 13-ஆம் தேதி வரைக்கும் ஏழு நாட்கள் கொண்டாடப்பட்டு வருது.
பிப்ரவரி 7-ஆம் தேதி ரோஸ் டே-ல ரோஜா பூக்களின் demand அதிகமா இருக்கும்… குறிப்பா முதல் தடவை காதலை வெளிப்படுத்துறவங்க Greeting card-உம் சிகப்பு ரோஜாக்களும்தான் கிஃப்டா கொடுப்பாங்க.
ஒருவேல அவங்களோட Proposal ok-ஆய்டுச்சுனா சாக்கலேட் , Teddybear , heart pillow, jwelleries-ன்னு தங்களோட காதலோட value-க்கு ஏத்தமாதிரி அவங்க கொடுக்ககூடிய கிப்ட்ஸும் ரொம்பவே costly-ஆனதான் இருக்கும்… இதுகூடவே செல்லபிராணிகள gifts-ஆ கொடுக்குறதையும் சிலர் வாடிக்கையா வச்சியிருக்காங்க… இப்படி gifts-ஓட டிமாண்ட் அதிகரிச்சதால காதலர் தினதுக்காகவே ஸ்பெஷலான சாக்கலேட் தயாரிச்சு விற்பனை செய்யப்படுது.
லவ் ஸ்டோரினு சொன்னாலே ஷாஜஹான் மும்தாஜ், ரோமியோ ஜீலியட், அம்பிகாபதி அமராவதி, லைலா மஜுனோ… இவங்களோட காதல்கதைகள்தான் நம்ம மனசுல தோணும்… இவங்கள மாதிரியே காதலோட icon-ஆ சில இடங்களும் நம்ம உலகத்துல இருக்கு… அதைதான் அடுத்துனாம பார்க்கபோறோம்.
பாரிஸ்ல இருக்க Effil tower முன்னாடி ஒருத்தர் தன்னோட காதலை சொன்னா.. அந்த காதல் ஏற்க்கப்படும்னு சொல்லப்படுது.. இதுக்கு காரணம் Effil tower இருக்க பகுதியில அதிக ஈர்ப்பு சக்தி இருக்குறதால இந்த மேஜிக் நடக்குறதா சொல்லாறங்க.
பேரிஸ்ல Seine ஆற்றங்கரையோரம் இருக்க பாலம் காதலுக்கு பெயர்போன இடமா பார்க்கப்படுது… காதலர்கள் தங்களோட பெயர்களை பூட்டுல எழுதி… அந்த பூட்டை பாலத்துல லாக் செஞ்சு… சாவிய நதியில தூக்கிவீசிருவாங்களாம்… பலவருடம் கம்பீரமா இருக்க பாலம் மாதிரியும் வத்தமாக ஓடுற நதிமாதிரியும் தங்களுடைய காதலும் பிரியாம இருக்கும்னு நம்புறாங்க.
உலகத்துல போர்களையே நிறுத்தக்கூடிய வலிமையான ஆயுதம்னா அது அன்புதான்… அன்போட வெளிப்பாடான காதலும் அன்பான ஆயுதம்தான்..!