பாரத பாரம்பரியத்தின் சாட்சி : மகாகும்ப மேளாவில் 50 கோடி பேர் புனித நீராடல்!
Aug 18, 2025, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாரத பாரம்பரியத்தின் சாட்சி : மகாகும்ப மேளாவில் 50 கோடி பேர் புனித நீராடல்!

Web Desk by Web Desk
Feb 16, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரயாக்ஜில் நடை பெறும் மகாகும்பமேளாவில் , இது வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மகாகும்பமேளா உலகின் மிகப் பெரிய இந்துமத திருவிழாவாகும். பல நூற்றாண்டுகளாக இடைவிடாமல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா நடைபெற்று வருகிறது. பாரத சமுதாயம்,  பாரத பண்பாடு, பாரத கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் கும்ப மேளா திருவிழா பாரத பாரம்பரியத்தின் சாட்சியாக இருக்கிறது.

சீனப் பயணிகள் யுவான் சுவாங் மற்றும் ஃபாஹியான், கிரேக்க பயணி மெகஸ்தனிஸ் ஆகியோர் தமது  பயணக் குறிப்புகளில் கும்ப மேளா பற்றி பதிவு செய்துள்ளனர். முகலாயர்களுக்கு எதிரான நாகா சாதுக்களின் போராட்டம் தொடர்ந்த காலத்திலும் கும்ப மேளாக்கள் நடந்துள்ளன. பிறகு, முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் இந்தியாவில் வழக்கமாக கும்பமேளாக்கள் நடைபெற்றன.

ஆங்கிலேயர் ஆட்சியிலும் நடந்த கும்பமேளாக்களை விசித்திரமாக பார்த்தார்கள். ஆனாலும்,  படிப்படியாக ஆங்கிலேயர்களும் கும்ப மேளா திருவிழாவில் கலந்து கொண்டனர். விடுதலை போராட்ட காலங்களில்,மக்கள் மத்தியில் தேசிய உணர்வை ஏற்படுத்த, மகாத்மா காந்தி, நேரு உள்ளிட்ட செல்வாக்கு பெற்ற தலைவர்கள் அனைவரும், கும்ப மேளா திருவிழாவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

இந்த ஆண்டுக்கான மகா கும்ப மேளா கடந்த ஜனவரி 13ம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் பிரயாக் ராஜில் தொடங்கியது. இந்தியா மட்டுமின்றி, உலகமெங்கும் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.  மகர சங்கராந்தி அன்று மூன்றரை கோடி பேர் அமிர்த ஸ்நானத்தில் பங்கேற்றனர். மௌனி அமாவாசை அன்று மட்டும், ஒரே நாளில் 8 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர். ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி மாதங்களில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.. பௌஷ் பூர்ணிமா அன்று 1.7 கோடி பக்தர்கள் புனித  நீராடியுள்ளனர். வசந்த பஞ்சமி அன்று, 2.57 கோடி பக்தர்கள் சடங்கு  நீராடியுள்ளனர்.

மக பூர்ணிமாவின் குறிப்பிடத்தக்க நீராடல் திருவிழாவான திரிவேணி சங்கமத்தில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 50 கோடிக்கும் மேல் திரிவேணிசங்கமத்தில் நீராடியுள்ளனர். அதேநாளில் பல்வேறு படித்துறைகளில் கங்கையை சுத்தம் செய்யும் பணியில் 300க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பங்கேற்று மகா கும்பமேளா உலக தூய்மை பணியில் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 110 கோடிக்கு அதிகமான குடிமக்கள் சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிறார்கள். இதில், 50 கோடிக்கும் மேற்பட்ட குடிமக்கள் சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இது,  மகத்தான சனாதனத்தின் மீது ஆழமான வேரூன்றிய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. உண்மையான அர்த்தத்தில், இது இந்தியாவின் பொது நம்பிக்கையின் அமிர்தக் காலம் என்று தனது எக்ஸ் பதிவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

45 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போதே 50 கோடி பேர் வந்துள்ளனர். இது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளின் மக்கள் தொகை, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியவர்களை விடவும் மிக குறைவு என்பது குறிப்பிடத் தக்கது.

மகா கும்ப மேளா திருவிழா முடிய இன்னும்  12 நாட்கள் உள்ளன.  வரும் பிப்ரவரி 26ம் தேதி மிக சிறப்பான நாளாக உள்ளது. எனவே, கும்ப மேளாவுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை  60 கோடியை தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Witness of Bharat's heritage: 50 crore people take holy dip in Maha Kumbha Mela!Bharat's heritageMaha Kumbha Mela
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அரசு ஊழியர்கள் பணி நீக்க விவகாரம் – எலான் மஸ்க்குக்கு எதிராக வழக்கு!

Next Post

நத்தம் தவசிமடை ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies