5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் - என்ன நடக்கிறது மாலியில்?
Aug 7, 2026, 07:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

Murugesan M by Murugesan M
Nov 9, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் 5 இந்திய தொழிலாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆயுதக்குழுக்களின் அட்டகாசத்தால் மாலியில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், இந்தியர்கள் கடத்தப்பட காரணம் என்ன என்பதை பற்றித் தற்போது பார்க்கலாம்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தாலும், அங்கு அல்குவைதா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்களின் கைகள் ஓங்கியுள்ளன. குறிப்பாக அல்குவைதா ஆதரவு பெற்ற ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிம், சுருக்கமாக ஜேஎன்ஐஎம் குழுக்களின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உள்நாட்டில் நிலைமை இப்படியே நீடிப்பதால், பொருளாதார நெருக்கடி அந்நாடு முழுவதும் வியாபித்துள்ளது.

இந்நிலையில், அல்குவைதா ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள், கோப்ரி அருகே ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 5 பேரைத் துப்பாக்கி முனையில் கடத்தியிருக்கிறது. இது மாலியின் பாதுகாப்பு நிலைமை மோசமாகி வருவதையும், அல்குவைதா போராளிக்குழுக்களின் செல்வாக்கு பெருகி வருவதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.. தலைநகர் பமாகோ கிட்டத்தட்ட போராளி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்குப் பாதுகாப்புக்கு என்ன விலை என்ற கேட்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.

கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து அதே நிறுவனத்தின் பிற பகுதிகளில் பணியாற்றிய இந்தியர்கள் அனைவரும் பமாகோவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு எந்த ஆயுதமேந்திய குழுக்களும் பொறுப்பேற்காத நிலையில், கடத்தப்பட்ட தொழிலாளர்கள்பற்றி விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று தெரிகிறது.

கடந்த செப்டம்பர் மாதம், ஜேஎன்ஐஎம் குழு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஈரானைச் சேர்ந்த ஒருவரைக் கடத்தியது. பின்னர் 50 மில்லியன் அமெரிக்க டாலர் பிணையாகப் பெற்றுக் கொண்டு அவர்களை விடுவித்தது. இதே போன்று பணத்திற்காகவே இந்தியர்கள் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. சமீபத்திய ஆண்டுகளில் ஆயுதக்குழுக்கள் வெளிநாட்டினரை கடத்துவதும், அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு பணத்தை ஈட்டுவதும் மாலியில் வழக்கமான நடைமுறைகளாக மாறிவிட்டதை காட்டுகிறது. அல்ஜீரியாவை தளமாகக் கொண்ட இஸ்லாமிய மக்ரெப், அன்சார்டைன், அல்-முராபிதுன் மற்றும் மசினா உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் ஒருங்கிணைந்து 2017ம் ஆண்டு ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிம் என்ற குழுவைத் தோற்றுவித்தது.

இந்தக் குழுக்களின் தலைவர்கள், மாலி மற்றும் வெளிநாட்டுப் படைகளுக்கு எதிரான செயல்பாட்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், சஹேல் பகுதி முழுவதும் செல்வாக்கை விரிவுபடுத்தவும் தங்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்தனர். கடந்த பத்தாண்டுகளில், JNIM தனது செல்வாக்கை மத்திய மாலி மற்றும் பர்கினா பாசோ மற்றும் நைஜருடன் பகிர்ந்து கொண்ட எல்லைப் பகுதிகளில் சீராக விரிவுபடுத்தியுள்ளது.

இந்தக் குழு தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதற்காகக் கொரில்லாப் போர், படுகொலைகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் பேச்சுவார்த்தை என கலவையாகச் செயல்படுகிறது. மாநில கட்டமைப்புகளைப் பலவீனப்படுத்துவற்காக, சாலைகள், பள்ளிகள், தகவல் தொடர்பு வசதிகள் போன்ற உள்கட்டமைப்புகளை இந்தக் குழு தகர்த்தெறிந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியான ஆட்சிக் கவிழ்ப்புகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ராணுவ நிர்வாகத்தால் மாலி தற்போது ஆளப்படுகிறது. எனினும் இதையெல்லாம் ஆயுதக்குழுக்கள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

மாலியின் தலைநகர் பமாகோ ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட ஜேஎன்ஐஎம் ஆயுதக் குழு தலைநகர் நோக்கி வலுவாக முன்னேறி வருவது மக்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கடத்தப்பட்ட இந்தியர்களின் நிலை என்னவென்று அறிவதற்கான முயற்சிகள் தொடருகின்றன. விரைவில் அவர்களைப் பற்றிய விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Terrorists kidnap 5 Indians - What's happening in Mali?
Share
Tweet
SendShare
Previous Post

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு – செபி எச்சரிக்கை!

Next Post

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

Related News

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies