புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் மார்ச் 11-ம் தேதி ஆஜராக மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் ஈடுபட்டதாக, சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு மார்ச் மாதம் 11ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் ஆஜராக மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.