திருவள்ளூர் அருகே சாலை விரிவாக்க பணியின்போது கண்டறியப்பட்ட சுரங்கப்பாதை குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் அங்கு சாலை விரிவாக்க பணிகளுக்காக கற்களை பெயர்த்து எடுத்தபோது முருகப்பெருமானின் மூலஸ்தானம் முன்பு உள்ள அர்த்த மண்டபத்திலிருந்து நிலவரை சுரங்கப்பாதை இருப்பு கண்டறியப்பட்டது.
தொடர்ந்து இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சுரங்கப்பாதை திருவாலங்காடு வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருப்பதாக கூறப்படுகிறது.