கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் அறநிலையத்துறையின் நடவடிக்கையை கண்டித்து வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கும் பணியில் இந்து சமய அறநிலையத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகளுக்கு அவர்கள் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.