தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் உடைமைகளை இருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு உள்ளே சென்ற பெண் உள்ளிட்ட இருவர் செவிலியர்களின் உடைமைகளை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து வெளியான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.