ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.
9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் கராச்சியில் நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இறுதியில் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 316 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 43 புள்ளி 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.