தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலக்காவேரி பகுதியில் அளவுக்கு அதிகமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால் அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியில் வரவே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அப்பகுதி சிறுவனை தெரு நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சிகளும், கோழிகளை நாய்கள் பிடித்து செல்லும் காட்சிகளும் வைரலாகி வருகிறது.