மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 131 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதேபோல மீனவர்களின் 18 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்தும், கைதான மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.