கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் நடைபெற்ற பரிகார பூஜையில் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ரஷ்ய நாட்டின் பெட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த 40 நபர் தமிழகத்தில் உள்ள நவக்கிரக கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கோயிலில் நடைபெற்ற ராகுக்காண பரிகார பூஜையில் ரஷ்ய நாட்டினர் கலந்து கொண்டனர்.
ராகு பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகங்களில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.