முந்தைய ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கையால் டெல்லி அரசுக்கு 2,002 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2021-2022 ம் நிதியாண்டில் மதுபானக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.