அனைத்துக்கட்சி கூட்டம் : தமிழக மக்களை குழப்பும் திமுக!
Sep 17, 2025, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனைத்துக்கட்சி கூட்டம் : தமிழக மக்களை குழப்பும் திமுக!

Web Desk by Web Desk
Feb 26, 2025, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தமிழக மக்களை குழப்ப திமுக அரசு முயல்வதாக புகார் எழுந்துள்ளது. திமுக அரசு மீது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதிருப்தியை திசை திருப்பவே அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன் மூலம் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 லிருந்து 31 ஆக குறையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அதோடு இந்த விவகாரம் குறித்து விவாதிக்கும் வகையில் வரும் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு இதுவரை எந்த வித அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், தமிழக அரசு தாமாக முன்வந்து இந்த பிரச்னையை கிளப்பியிருப்பதன் பின்னணியில் பல்வேறு விவகாரங்கள் அடங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் தலைநகரத்தில் தொடங்கி கடைக்கோடி கிராமம் வரை அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்படுவதும் தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், நிறைவேற்றாமல் இருப்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் மூன்றரை லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், அரசுப்பணி கனவில் இரவு பகலாக தயராகிக் கொண்டிருக்கும் இளைஞர் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியாக ஒட்டுமொத்த சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் தமிழகத்தில் எழுந்திருக்கும் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் திசை திருப்பி மக்களை குழப்பவே தற்போது தொகுதி மறுசீரமைப்பு எனும் பிரச்னையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், தற்போது இந்த பிரச்னையை பெரிது படுத்துவதற்கும் பின்னணியில் இந்த காரணங்களே அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை மற்றும் பி எம் ஸ்ரீ பள்ளிகள் விவகாரத்தில் மத்திய அரசின் மீது முழு பழியை போட்டு மக்களை குழப்பும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தையும் ஊதிப் பெரிதாக்கி மத்திய அரசுக்கு எதிராக மக்களை தயார்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கிடையே, பாராளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யும் போது, தென்மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாகவே இருக்கும் என தெரிவித்த பின்னரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இந்த பயத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கற்பனையான பயங்களும், முட்டாள் தனமான வாதங்களுமே தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் தமிழக அரசு, இதற்கு முன்பு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளால் ஒரு பயனும் கிடைத்ததில்லை எனவும், அதை போலவே அனைத்துக் கட்சி கூட்டம் என்பது மக்களையும், கூட்டணிக் கட்சிகளையும் ஏமாற்றும் செயலே என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: DMKADMKtn politicsAll-party meeting: DMK confusing the people of Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : அரசுப் பள்ளியில் கழிவறை கட்டும் பணி தொடக்கம்!

Next Post

திருவண்ணாமலை : சொந்த செலவில் சாலை அமைக்கும் குடியிருப்புவாசிகள்!

Related News

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

Load More

அண்மைச் செய்திகள்

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies