நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் உள்ள கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரத்தில் உள்ள சிவானந்தா சாலையில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கவின்ராஜ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கழிவறைக்கு சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கழிவறைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது மாணவன் மயங்கிய நிலையில் கிடந்ததாக தெரிகிறது. இதையடுத்து, மாணவன் கவின்ராஜை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இந்நிலையில், மாணவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.