கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், ஞானவேல் என்பவரை கைது செய்து 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.