சீமான் மீதான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் அரசியல் காரணமாக தன் மீது வழக்கு தொடரப்படுவதாக சீமான் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் விஜயலட்சுமி இதற்கு முன்னதாக கொடுத்த 3 புகார்களை திரும்ப பெற்றுள்ளதாகவும் சீமான் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து மனு குறித்து விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், இடைப்பட்ட காலத்தில் இழப்பீடு வழங்குவது குறித்து இருதரப்பும் பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் எதிர்மனுதாரர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.