நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றும் விவகாரம் - அரசு உயரதிகாரிகள் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி!
Jul 23, 2025, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றும் விவகாரம் – அரசு உயரதிகாரிகள் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 08:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு பணியாற்றி வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துணை ஆட்சியராக பணியாற்றியவரை பணி ஓய்வு பெறும் நாளில் காரணமின்றி இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அண்மையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அதேபோல, நெல்லையைச் சேர்ந்த தனிநபரும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி பட்டு தேவானந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு விளக்கத்தை அளிக்க தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அமுதா நேரில் ஆஜரானார்.

வழக்கு விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, கடந்த 2 மாதங்களில் மட்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

கல்வித்துறையில் அதிகமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி,  அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு பணியாற்றி வருவதாகவும்  தெரிவித்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது தேவையற்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது.  அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Tags: High Court madurai benchimplementing court orders issue.Tamil Nadu Revenue Principal Secretary Amudha appearedsenior government officials not implement court orders.
ShareTweetSendShare
Previous Post

பழனி கோயில் நவபாஷாண முருகன் சிலை உறுதியாக உள்ளது – சிலை பாதுகாப்பு குழு தலைவர் பேட்டி!

Next Post

திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டி – 3 இளைஞர்களுக்கு கத்திக்குத்து!

Related News

லண்டன் : அமைதியாக எதிர்விணை ஆற்றிய இஸ்கான் அமைப்பினர்!

 பிரிட்டன் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை பழக்கங்கள் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இத்தாலி : குகையில் 130 அடி ஆழத்தில் சிக்கிய ஆய்வாளர் மீட்பு!

திமுகவினர் தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ளனர் : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் 

சென்னை : 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தை!

Load More

அண்மைச் செய்திகள்

அதிக வெள்ளையாக இல்லாததால் பட வாய்ப்பு பறிபோனது – வாணி கபூர்

டிஜிட்டல் உலகில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைத்துறை மேம்பட்டுள்ளது : நடிகர் கிங்காங்

தருமபுரி அருகே வீட்டின் மீது அரசு பேருந்து மோதி விபத்து – சிறுமி உயிரிழப்பு!

மலையாள திரைப்படமான Ronth ஓடிடி தளத்தில் ரிலீஸ்!

சீனா : வரவேற்பை பெற்ற சோலார் மின்விசிறி தொப்பிகள்!

சென்னை : தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மனித சங்கிலி போராட்டம்!

ஆர்டிக் பகுதியில் காலநிலை மாற்றம், மாசுபாட்டால் பாதிக்கப்படும் துருவக் கரடிகள்!

உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை தமிழகம் 10ம் இடம் – மத்திய அரசு தகவல்!

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைவதை பார்த்து திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டது : டிடிவி தினகரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies