நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றும் விவகாரம் - அரசு உயரதிகாரிகள் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி!
Jul 27, 2026, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றும் விவகாரம் – அரசு உயரதிகாரிகள் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 6, 2025, 08:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு பணியாற்றி வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துணை ஆட்சியராக பணியாற்றியவரை பணி ஓய்வு பெறும் நாளில் காரணமின்றி இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அண்மையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அதேபோல, நெல்லையைச் சேர்ந்த தனிநபரும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி பட்டு தேவானந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு விளக்கத்தை அளிக்க தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அமுதா நேரில் ஆஜரானார்.

வழக்கு விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, கடந்த 2 மாதங்களில் மட்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

கல்வித்துறையில் அதிகமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி,  அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு பணியாற்றி வருவதாகவும்  தெரிவித்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது தேவையற்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது.  அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Tags: High Court madurai benchimplementing court orders issue.Tamil Nadu Revenue Principal Secretary Amudha appearedsenior government officials not implement court orders.
ShareTweetSendShare
Previous Post

பழனி கோயில் நவபாஷாண முருகன் சிலை உறுதியாக உள்ளது – சிலை பாதுகாப்பு குழு தலைவர் பேட்டி!

Next Post

திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டி – 3 இளைஞர்களுக்கு கத்திக்குத்து!

Related News

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை – வருகிறது சட்ட திருத்தம்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

Load More

அண்மைச் செய்திகள்

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies