மும்மொழி கையெழுத்து இயக்கம் - தமிழிசையின் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அனுமதி!
Aug 18, 2025, 06:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மும்மொழி கையெழுத்து இயக்கம் – தமிழிசையின் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அனுமதி!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 3 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்திய போலீசார் பின்னர் அனுமதி வழங்கினர்.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர். நகரில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. அங்கு தொண்டர்களுடன் வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜன், பொதுமக்களிடம் கையெழுத்து வாங்க முயன்றார். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் பாஜகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து, தமிழிசையை சுற்றி வளைத்த போலீசார், நகர விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவல்துறையிடம் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமைதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை போலீசார் கலவரமாக்க முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது தமிழிசைக்கு ஆதரவாக, “பாமர மக்களுக்கு சம கல்வி வேண்டும்” என பாஜகவினர் முழக்கம் எழுப்பினர்.

அதன்பிறகு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழிசை சௌந்தரராஜனை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சுற்றிவளைத்து அதே இடத்தில் நிறுத்தி வைத்தனர். இதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், 3 மணி நேரம் கழித்து கையெழுத்து இயக்கத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கினர். உடனே அங்கிருந்த மக்கள், தாமாக முன்வந்து கையெழுத்திட்டனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு திமுக அச்சமடைந்திருப்பதாக தெரிவித்தார். 3 மணி நேரத்திற்கு பின்னர் கையெழுத்து வாங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழிசை, பொதுமக்களை சந்திப்பதற்கு தடை விதிக்க காவல்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் தமிழிசையை தடுத்து நிறுத்திய காவல்துறைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழை வியாபாரமாக்கி தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழி கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். திமுகவின் நாடகத்தை பொதுமக்கள் உணர தொடங்கி, மும்மொழி கொள்கைக்கு ஆதரவளிப்பதை கண்டு பயத்தில் முதலமைச்சர் நிலை தடுமாறுகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.

இதேபோல, தமிழிசை தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: three-language policyChennai MGR NagarTamilisai Soundararajan demothree-language policy signatures3 hours demo by tamilisai
ShareTweetSendShare
Previous Post

காட்டெருமை தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Next Post

அண்ணா சொன்னதை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் : இராம. ஸ்ரீனிவாசன்

Related News

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies