மும்மொழி கையெழுத்து இயக்கம் - தமிழிசையின் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அனுமதி!
Nov 16, 2025, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழி கையெழுத்து இயக்கம் – தமிழிசையின் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அனுமதி!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 3 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்திய போலீசார் பின்னர் அனுமதி வழங்கினர்.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர். நகரில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. அங்கு தொண்டர்களுடன் வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜன், பொதுமக்களிடம் கையெழுத்து வாங்க முயன்றார். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் பாஜகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து, தமிழிசையை சுற்றி வளைத்த போலீசார், நகர விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவல்துறையிடம் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமைதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை போலீசார் கலவரமாக்க முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது தமிழிசைக்கு ஆதரவாக, “பாமர மக்களுக்கு சம கல்வி வேண்டும்” என பாஜகவினர் முழக்கம் எழுப்பினர்.

அதன்பிறகு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழிசை சௌந்தரராஜனை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சுற்றிவளைத்து அதே இடத்தில் நிறுத்தி வைத்தனர். இதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், 3 மணி நேரம் கழித்து கையெழுத்து இயக்கத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கினர். உடனே அங்கிருந்த மக்கள், தாமாக முன்வந்து கையெழுத்திட்டனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு திமுக அச்சமடைந்திருப்பதாக தெரிவித்தார். 3 மணி நேரத்திற்கு பின்னர் கையெழுத்து வாங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழிசை, பொதுமக்களை சந்திப்பதற்கு தடை விதிக்க காவல்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் தமிழிசையை தடுத்து நிறுத்திய காவல்துறைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழை வியாபாரமாக்கி தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழி கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். திமுகவின் நாடகத்தை பொதுமக்கள் உணர தொடங்கி, மும்மொழி கொள்கைக்கு ஆதரவளிப்பதை கண்டு பயத்தில் முதலமைச்சர் நிலை தடுமாறுகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.

இதேபோல, தமிழிசை தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: 3 hours demo by tamilisaithree-language policyChennai MGR NagarTamilisai Soundararajan demothree-language policy signatures
ShareTweetSendShare
Previous Post

காட்டெருமை தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Next Post

அண்ணா சொன்னதை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் : இராம. ஸ்ரீனிவாசன்

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies