மும்மொழி கையெழுத்து இயக்கம் - தமிழிசையின் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அனுமதி!
Aug 8, 2026, 04:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழி கையெழுத்து இயக்கம் – தமிழிசையின் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அனுமதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 6, 2025, 02:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 3 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்திய போலீசார் பின்னர் அனுமதி வழங்கினர்.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர். நகரில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. அங்கு தொண்டர்களுடன் வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜன், பொதுமக்களிடம் கையெழுத்து வாங்க முயன்றார். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் பாஜகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து, தமிழிசையை சுற்றி வளைத்த போலீசார், நகர விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவல்துறையிடம் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமைதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை போலீசார் கலவரமாக்க முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது தமிழிசைக்கு ஆதரவாக, “பாமர மக்களுக்கு சம கல்வி வேண்டும்” என பாஜகவினர் முழக்கம் எழுப்பினர்.

அதன்பிறகு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழிசை சௌந்தரராஜனை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சுற்றிவளைத்து அதே இடத்தில் நிறுத்தி வைத்தனர். இதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், 3 மணி நேரம் கழித்து கையெழுத்து இயக்கத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கினர். உடனே அங்கிருந்த மக்கள், தாமாக முன்வந்து கையெழுத்திட்டனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு திமுக அச்சமடைந்திருப்பதாக தெரிவித்தார். 3 மணி நேரத்திற்கு பின்னர் கையெழுத்து வாங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழிசை, பொதுமக்களை சந்திப்பதற்கு தடை விதிக்க காவல்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் தமிழிசையை தடுத்து நிறுத்திய காவல்துறைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழை வியாபாரமாக்கி தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழி கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். திமுகவின் நாடகத்தை பொதுமக்கள் உணர தொடங்கி, மும்மொழி கொள்கைக்கு ஆதரவளிப்பதை கண்டு பயத்தில் முதலமைச்சர் நிலை தடுமாறுகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.

இதேபோல, தமிழிசை தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: 3 hours demo by tamilisaithree-language policyChennai MGR NagarTamilisai Soundararajan demothree-language policy signatures
Share
Tweet
SendShare
Previous Post

காட்டெருமை தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Next Post

அண்ணா சொன்னதை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் : இராம. ஸ்ரீனிவாசன்

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies