மும்மொழி கையெழுத்து இயக்கம் - தமிழிசையின் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அனுமதி!
Jun 22, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழி கையெழுத்து இயக்கம் – தமிழிசையின் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் அனுமதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 6, 2025, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 3 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்திய போலீசார் பின்னர் அனுமதி வழங்கினர்.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர். நகரில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. அங்கு தொண்டர்களுடன் வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜன், பொதுமக்களிடம் கையெழுத்து வாங்க முயன்றார். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் பாஜகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து, தமிழிசையை சுற்றி வளைத்த போலீசார், நகர விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவல்துறையிடம் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமைதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை போலீசார் கலவரமாக்க முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது தமிழிசைக்கு ஆதரவாக, “பாமர மக்களுக்கு சம கல்வி வேண்டும்” என பாஜகவினர் முழக்கம் எழுப்பினர்.

அதன்பிறகு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழிசை சௌந்தரராஜனை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சுற்றிவளைத்து அதே இடத்தில் நிறுத்தி வைத்தனர். இதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், 3 மணி நேரம் கழித்து கையெழுத்து இயக்கத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கினர். உடனே அங்கிருந்த மக்கள், தாமாக முன்வந்து கையெழுத்திட்டனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு திமுக அச்சமடைந்திருப்பதாக தெரிவித்தார். 3 மணி நேரத்திற்கு பின்னர் கையெழுத்து வாங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழிசை, பொதுமக்களை சந்திப்பதற்கு தடை விதிக்க காவல்துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் தமிழிசையை தடுத்து நிறுத்திய காவல்துறைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழை வியாபாரமாக்கி தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழி கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். திமுகவின் நாடகத்தை பொதுமக்கள் உணர தொடங்கி, மும்மொழி கொள்கைக்கு ஆதரவளிப்பதை கண்டு பயத்தில் முதலமைச்சர் நிலை தடுமாறுகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.

இதேபோல, தமிழிசை தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: 3 hours demo by tamilisaithree-language policyChennai MGR NagarTamilisai Soundararajan demothree-language policy signatures
ShareTweetSendShare
Previous Post

காட்டெருமை தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Next Post

அண்ணா சொன்னதை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் : இராம. ஸ்ரீனிவாசன்

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies