பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!
Nov 4, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Mar 7, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அதில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலால் போர் மூண்டது.

அமெரிக்கா மற்றும் ஐ.நா சபையின் முயற்சியால் கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் இரு தரப்பினரிடையே முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி ஹமாஸ் தரப்பில் 8 பேரின் உடல்களுடன் 25 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேல் தரப்பில் 2 ஆயிரம் பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 24 பிணைக் கைதிகளும், 34 பிணை கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கத்தார் தலைநகர் தாஹோவில் அமெரிக்கா சார்பாக ஹமாஸ் அமைப்புடன் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பிணைக்கைதிகள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது.என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ஹமாஸ், தற்போது பாதி பிணை கைதிகளையும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கு பின் மற்றவர்களையும் விடுவிப்பதாக தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் அரசு காசா மக்களுக்கு வழங்கி வந்த உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றை நிறுத்தியுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிணை கைதிகளையும், இறந்தவர்களின் உடல்களையும் உடனடியாக இஸ்ரேலிடம் ஒப்படைக்கவில்லை என்றால், ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள் எனவும், இந்த தவறுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: Israel hostages issueIsraelHamasgazaUS President Trump has warnedhostages kidnapped from IsraelUS President Trump warning
ShareTweetSendShare
Previous Post

காரைக்காலில் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த இளைஞர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

Next Post

சிதம்பரத்தில் மாணவர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்!

Related News

பிலிபித் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திய புலி!

மத்தியப் பிரதேசம் : தலைக்கு ரூ.14 லட்சம் அறிவிக்கப்பட்ட சிறுமி சரணடைந்தார்!

வாக்குப்பதிவு அலுவலர்களின் முடிவில் திருப்தி இல்லையெனில் முறையிடலாம் – நெல்லை மாவட்ட ஆட்சியர் 

தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!

யூரியா இறக்குமதி அதிகரிப்பு!

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது – முதல்வர் ஸ்டாலின்

சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

ஆம்னி பேருந்தில் தீ விபத்து – பயணிகளை உடனடியாக இறக்கிவிட்ட ஓட்டுநர்!

மோசமான நிலையில் தமிழகம் : நயினார் நாகேந்திரன்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் – மாணவியின் நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்த ஏ.பி.முருகானந்தம்!

பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – டாஸ்மாக் கடையை சூறையாடிய நாதகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies