பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!
Jul 28, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அதில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலால் போர் மூண்டது.

அமெரிக்கா மற்றும் ஐ.நா சபையின் முயற்சியால் கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் இரு தரப்பினரிடையே முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி ஹமாஸ் தரப்பில் 8 பேரின் உடல்களுடன் 25 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேல் தரப்பில் 2 ஆயிரம் பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 24 பிணைக் கைதிகளும், 34 பிணை கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கத்தார் தலைநகர் தாஹோவில் அமெரிக்கா சார்பாக ஹமாஸ் அமைப்புடன் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பிணைக்கைதிகள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது.என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ஹமாஸ், தற்போது பாதி பிணை கைதிகளையும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கு பின் மற்றவர்களையும் விடுவிப்பதாக தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் அரசு காசா மக்களுக்கு வழங்கி வந்த உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றை நிறுத்தியுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிணை கைதிகளையும், இறந்தவர்களின் உடல்களையும் உடனடியாக இஸ்ரேலிடம் ஒப்படைக்கவில்லை என்றால், ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள் எனவும், இந்த தவறுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: US President Trump has warnedhostages kidnapped from IsraelUS President Trump warningIsrael hostages issueIsraelHamasgaza
ShareTweetSendShare
Previous Post

காரைக்காலில் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த இளைஞர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

Next Post

சிதம்பரத்தில் மாணவர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies