புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் என்பவர் மனைவி அருணா மற்றும் உறவினர்களுடன் புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்கு காரில் சென்றார்.
நமணசமுத்திரம் அருகே சென்றபோது செந்தமிழ் செல்வன் கண் உறங்கியதால் எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மேலும், சரக்கு வானத்தின் பின்னால் வந்த காரும் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் செந்தமிழ் செல்வன், அவரது மனைவி மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த நபர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சென்று போலீசார், விபத்தில் படுகாயமடைந்த செந்தமிழ் செல்வனின் குழந்தைகள், சரக்கு வாகன ஓட்டுநர் உட்பட 4 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.